search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே  தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
    X

    தென்மலையில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.


    சிவகிரி அருகே தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

    • தென்மலை ஊராட்சியில் தார் சாலை வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • ரூ.1,86 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வடகாசி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியில் கடந்த 10 வருடங்களாக சாலை வசதிகள் செய்து தராமல் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி தங்களது ஊர்களுக்கு சென்று வருவதாக தென்மலை, சுப்பிரமணியாபுரம், அருக ன்குளம், செந்தட்டியாபுரம், புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தார் சாலை வசதிகள் செய்து தருமாறு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அக்கோரிக்கையை ஏற்று தார்சாலை அமைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மூலமாக பணி ஆணையை பெற்று பிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,86 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வடகாசி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மீனலதா முத்தரசுபாண்டியன், துனைத்தலைவர் தேவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ஒன்றிய துணை செயலாளர் குமார், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணை ப்பாளர் முருகன் சாமிநாதன், கிளைச் செயலாளர் கருத்த பாண்டியன், குருசாமி, முருகேசன், ராஜகோபால், பரமன், அருகன்குளம் கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துராமன், தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் மகிழமுத்து, வாசு. ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பரமன், தேவபிச்சை, பிச்சைமணி, காளிமுத்து, கிரகதுரை, முத்தையா, வெள்ளகணேஷ், ராஜீவ் காந்தி, குணா, மணி, சங்கர், அருண், சக்தி, உள்ளார் மணிகண்டன், விக்கி, அரசு ஒப்பந்ததாரர்கள் மதன், மனோஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சாலையை அமைத்துத் தர முயற்சிகள் மேற்கொண்ட யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியனுக்கு தென்மலை, சுப்பிர மணியா புரம், அருகன்குளம், செந்தட்டி யாபுரம் புதூர் ஆகிய ஊர்களை சேர்ந்த பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×