search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவந்தா ஊராட்சியில் ரூ. 48.7 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலை பணி தொடக்கம்
    X

    கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

    கருவந்தா ஊராட்சியில் ரூ. 48.7 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலை பணி தொடக்கம்

    • கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
    • இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது.

    தென்காசி:

    வீ.கே. புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல் முயற்சியியால் ரூ. 48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கருவந்தா முதல் சோலைசேரி வரையிலான இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது. இதில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல், துணை தலைவர் மங்களம், ஊராட்சி செயலர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் பேச்சியம்மாள் மாரிச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணம்மாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×