என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடக்கம்
    X

    விளாத்திகுளம் அருகே புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடக்கம்

    • பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதிக்குழுவில் இருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியசாமிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மரிய ஆரோக்கிய சூசை, துணை தலைவர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×