search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்
    X

    வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம் நடைபெற்ற காட்சி.


    வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்

    • வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது.
    • 4 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் நியமனக்குழு,கல்விக்குழு, வேளாண்மைக் குழு, பொது நோக்க குழு ஆகிய 4 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், அருணாதேவி பாலசுப்ரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், கிராம ஊராட்சி மேலாளர் தில்லை, மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர்கள் சிலம்பரசன், முத்துக்குமார், கூடலூர் கிளை செயலாளர் குருசாமி பாண்டியன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×