search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasudevanallur"

    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், பள்ளி தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் பாலத்தாய் தங்கப் பழம், ரம்யா முருகேசன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜகயல்விழி வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், இக்காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் கிராமப்புறங்களில் பெண் கல்வியின் முக்கியத்து வத்தையும், தமிழக முதல்-அமைச்சரின் தன்னார்வலர்களை கொண்டு செயல்படும் இல்லம் தேடி கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினார்.

    இவ்விழாவில் பள்ளி யின் சார்பில் பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றி தழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். விழாவில் பள்ளி மாண வர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி களை கண்டு களித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகரில் உள்ள எஸ்.எம்.டி. சினி மெமோரியலில் நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் மபூனி சிட்டோ ரியோ கராத்தே இன்டர்நேஷனல் சார்பில் 8-ம் ஆண்டு சினி மெமோரியல் தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகரில் உள்ள எஸ்.எம்.டி. சினி மெமோரியலில் நடைபெற்றது. கராத்தே போட்டிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தவமணி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், நகர செயலாளர் பாசறை கணேசன், கராத்தே மாஸ்டர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குடும்பத்தின ரோடு கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கராத்தே மாஸ்டர் வீரமணி நன்றி கூறினார்.

    • கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பதவி யேற்ற பின்னர் முதன்முறையாக சிவகிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தார்.
    • கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச் சந்திரன் பதவி யேற்ற பின்னர் முதன்முறையாக சிவகிரி தாலுகா அலுவ லகத்திற்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு சிவகிரி தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகிரி தாலுகா அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள நகரம், முள்ளிக்குளம், இராமசாமியாபுரம், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட பணிகள், 15 -வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் உள்ள பணிகள், ஒருங்கிணைந்த பணி மேம்பாட்டு திட்ட பணிகள், அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்ட மானிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகை தந்து ஆய்வு செய்தார். வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க வேண்டியும், பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டியும் கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் ஜெயராமன், கருப்பசாமி, பொறியாளர் அருள்நா ராயணன், பணி பார்வை யாளர் முத்துமாரி, நியமன குழு உறுப்பினர் முனீஸ், கவுன்சிலர் சரவ ணன், சிவகிரி தாசில்தார் பழனிச்சாமி, துணை தாசில்தார் சரவணன், மணிகண்டன், கணேசன், வருவாய் ஆய்வாளர் சர வண குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    • இந்நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், கவிதா மற்றும் பள்ளியின் மாணவ - மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் தவமணி தலைமையில், தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் மகாத்மா காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, இயன்முறை மருத்துவர் புனிதா, கவிதா மற்றும் பள்ளியின் மாணவ - மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பூமி பூஜை விழாவுக்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெல்கட்டும் செவல் ஊராட்சியில், மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு பூமி பூஜை செய்து பணி ஆரம்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வாசுதே வநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திர மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மகேந்திரன், முனியராஜ், கிளைச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்ப சாமி, ஓவர்சீஸ் முத்துமாரி, அரசு ஒப்பந்த தாரர்கள் கார்த்தி, மாரித்துரை, பூசைத்துரை, உள்ளார் மணி கண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் திருவள்ளுவர் மன்றத்தின் 17 -ஆம் ஆண்டின் தொடக்கவிழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்றத்தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் திருவள்ளுவர் மன்றத்தின் 17 -ஆம் ஆண்டின் தொடக்கவிழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    திருவள்ளுவர் மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் படத்தை ஆசிரியர் வேலுச்சாமி திறந்துவைத்தார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நல்லாசிரியர் மோகன சுந்தரம், ஆசிரியர் ராமர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, சரவணன், பாவாணர் கோட்டப் பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இணை செயலாளர் புலவர் சந்திரன் நினைவு பரிசுகள் வழங்கினார்.பேரூராட்சி மன்றத்தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் பிள்ளை யார்சாமி, நகரச் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், சுமங்கலி கோமதி சங்கர், சாமிநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
    • டி.எஸ்.பி. அசோக் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சமாதான புறா பறக்கவிடப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புளியங்குடி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முருகேசன், மரங்களின் காதலன் தலைமலை மற்றும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் இராஜகயல்விழி வரவேற்று பேசினார். பள்ளியின் சேர, சோழ, பாண்டியா மற்றும் பல்லவாஸ் அணிகளின் அணிவகுப்பு மரியாதையை டி.எஸ்.பி. அசோக் ஏற்றுக் கொண்டார்கள்.

    மேலும் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக டி.எஸ்.பி. அசோக் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சமாதான புறா பறக்கவிடப்பட்டது. மாணவர்கள் பல வகையான வண்ண கலர்களுடன் கூடிய உபகரணங்களை வைத்து உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டி செய்து அசத்தினார்கள்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் , கேடயங்களும் , சான்றிதழும் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கு தனியாக விளையாட்டு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உடனடியாக பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • கபடி போட்டியை பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
    • ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 8 பரிசுகள், அதற்கான சுழற் கோப்பைகள், 60 கிலோ எடை பிரிவில் 4 பரிசுகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி காளியம்மன் கோவில் திடலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் சோனிக் கபடி குழு சார்பாக தமிழ் மாநில அளவிலான ஆண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

    இதில் ஓபன் மற்றும் 60 கிலோ எடை பிரிவில் பிரசித்தி பெற்ற மாநிலம் முழுவதும் இருந்து 80 அணிகள் கலந்து கொண்டன.

    கபடி போட்டியை பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், பாரதீய ஜனதா கட்சி தென்காசி மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கங்காதரன், சிவா, பாலகிருஷ்ணன் ராம்வேல் மற்றும் ஆத்துவழி ஊர் நாட்டாமைகள், அரசியல் கட்சி முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 8 பரிசுகள், அதற்கான சுழற் கோப்பைகள், 60 கிலோ எடை பிரிவில் 4 பரிசுகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை ஆத்துவழி சூப்பர் சோனிக் கபடி குழு நிர்வாகிகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தார்.

    தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரியில் ஐந்து இடங்களிலும், விஸ்வநாதபேரி, இனாம்கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு அ.ஆனந்தன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் ஜெரோம் ராமன், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓபிசி அணி துணைத்தலைவர் தங்கம், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணியன், கந்தசாமி, சிவகிரி நகர தலைவர் ஒருசொல்வாசகன், கருப்பையா, குமார், கண்ணன், ஒன்றிய துணைத்தலைவர்கள், இசக்கி முத்து, வேல்முருகன், அரிச்சந்திரன், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே சங்கனாப்பேரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் தலைமை தாங்கி சங்கனாப்பேரி கிராம பஞ்சாயத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

    வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சாகுல் ஹமீது, ஆனந்த், சங்கனாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சமுத்திரவேல், விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் இளஞ்செழியன் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் உணவு மற்றும் நுண்ணூட்ட சத்து விநியோகம் திட்டத்தின் கீழ் சுழற் கலப்பைகளை சங்கனாப்பேரி, திருமலாபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு வழங்கினார். திருமலாபுரம் விதைப் பண்ணைகளையும், தென்மலை மற்றும் ராமசாமி யாபுரம் பகுதி களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தரிசு நில தொகுப்பு திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.
    • வாசுதேவநல்லூர் அருகே விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விதை நேர்த்தி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

    கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன் மற்றும் சுமிதா பாரதி ஆகியோர் அறிவுரையின்படி நேற்று வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் விதை நேர்த்தி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    • இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    சிவகிரி:

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், பேரூர் செயலாளர் ரூபிபாலா, இளைஞரணி முனீஸ்வரன், டாக்டர் கிருஷ்ணா, செல்வம், மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ஜெயப்பிரகாஷ், நிர்வாக உறுப்பினர் துரைப்பாண்டி, வாசுதேவநல்லூர் தன்னார்வல இளைஞர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.
    • அங்கன்வாடியை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி வேண்டுமென அங்கன்வாடி அமைப்பாளர் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அங்கன்வாடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை செய்து தந்த யூனியன் சேர்மனுக்கு அங்கன்வாடி அமைப்பாளர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×