search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Process description"

    • நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும்
    • ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் ஊராட்சியில், மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக மாணவி கே.பரிமளா விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பற்றியும், அதன் பயன்பாடு மற்றும் செயல்முறை பற்றியும் விளக்கம் அளித்தார். இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.
    • வாசுதேவநல்லூர் அருகே விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விதை நேர்த்தி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

    கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன் மற்றும் சுமிதா பாரதி ஆகியோர் அறிவுரையின்படி நேற்று வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் விதை நேர்த்தி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    ×