search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karatae Competition"

    • இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
    • இதில் சாம்பார்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார்.

    சாம்பவர்வடகரை:

    இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இலங்கை, இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இந்திய அணி சார்பாக தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து சிலுக்கான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசன் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் ராஜ மகேந்திரன் தங்கப்பதக்கம் வென்ற வீரரை பாராட்டினார்.

    • சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
    • கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளாத்திகுளம்:

    இலங்கையில் நடைபெற உள்ள இண்டோ ஸ்ரீலங்கா சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

    வருகிற 24, 25 -ந் தேதிகளில் இலங்கையில் நடைபெற உள்ள இந்த சர்வதேச கராத்தே போட்டிக்கு சோபுகாய் கோஜ்ரியோ கராத்தே- டூ இந்தியா சார்பில் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார் தலைமையில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

    கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் பங்குபெறும் மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளி நிர்வாக அலுவலர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 15 வெள்ளிப் பதக்கத்தையும், 12 வெண்கல பதக்கத்தையும் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    விளாத்திகுளம்:

    பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கட்டா மட்டும் சண்டை பிரிவில் 14 தங்கப்பதக்கத்தையும், 15 வெள்ளிப் பதக்கத்தையும், 12 வெண்கல பதக்கத்தையும் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினரும், பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகரில் உள்ள எஸ்.எம்.டி. சினி மெமோரியலில் நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் மபூனி சிட்டோ ரியோ கராத்தே இன்டர்நேஷனல் சார்பில் 8-ம் ஆண்டு சினி மெமோரியல் தமிழ்நாடு மாநில கராத்தே போட்டி வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகரில் உள்ள எஸ்.எம்.டி. சினி மெமோரியலில் நடைபெற்றது. கராத்தே போட்டிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தவமணி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், நகர செயலாளர் பாசறை கணேசன், கராத்தே மாஸ்டர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குடும்பத்தின ரோடு கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கராத்தே மாஸ்டர் வீரமணி நன்றி கூறினார்.

    ×