சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தென்காசி வீரருக்கு தங்கப்பதக்கம்

இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சாம்பார்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார்.
சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தென்காசி வீரருக்கு தங்கப்பதக்கம்
Published on

சாம்பவர்வடகரை:

இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இலங்கை, இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இந்திய அணி சார்பாக தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து சிலுக்கான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசன் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் ராஜ மகேந்திரன் தங்கப்பதக்கம் வென்ற வீரரை பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com