search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Triple festival"

    • முத்துகிருஷ்ணபேரியில் முப்பெரும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • ஆர்.கே.காளிதாசன், எஸ்.எம். நாராயண நாடார், நடராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ண பேரியில், வட்டார வியாபாரிகள் சங்க 5-ம் ஆண்டு தொடக்க விழா, சங்க கொடி ஏற்று விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மண்டலத் தலைவரும், தென்காசி மாவட்டத் தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா சங்க கொடியேற்றுகிறார். எஸ்.எம்.என். ஹரிகிருஷ்ணன், எம்.ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கே.காளிதாசன், எஸ்.எம். நாராயண நாடார், நடராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    மேலும், இஸ்மாயில், திவ்யா ரங்கன், அய்யப்பன், சின்னதுரை, செல்வராஜ், சோலையப்பராஜா, காமராஜ் நாடார், ஜெயபாலன், கணேசன், காஜாமுகைதீன், நயன் சிங், ஐ.வி.என். கலைவாணன், அசோ கன், குணசேகரன், காமராஜ், ரத்தினசாமி, உதயராஜ், பால சுப்பிர மணியன், நாராயண சிங்கம், பரமசிவன், முருகன், இசக்கி, விஜய்சிங், சண்முகசுந்தரம், முத்துவேல், வேல்சாமி, சிவன் பாண்டியன், ஆறுமுகம் ஆகி யோரும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    சிவபெருமாள், ராம கிருஷ்ணன், வைத்திலிங்கம், செல்வம், செயற்குழு உறுப்பி னர்கள் பரமசிவன், தங்கராஜ், பொன்னுதுரை ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

    ஏற்பாடுகளை சுதர்சன், சங்கரநாராயணன், விஜய முருகன், மாணிக்கராஜா, மதன்ராஜ், சுப்பிரமணியன், செந்தில்குமார், மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பதி னேழு ஆண்டுகள் கல்வி பணியிலிருந்து பதினெட்டா வது ஆண்டில் கல்வி சேவையாற்றும் செயலாள ருக்கு பாராட்டு விழா, ஆசி ரியர் தின விழா மற்றும் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப் பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் கல்லூரி முதல் வர் அ.ராமசுப்பையா வர வேற்புரை யாற்றினார். கல்லூரி தலைவர் சு.ராஜ கோபால் தலைமை தாங்கி னார். கல்லூரியின் துணைத் தலைவர் ரா.ஜெயராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் உதவிச் செய லாளர் க.ராஜேந்திர பாபு மற்றும் கல்லூரியின் பொரு ளாளர் ஆ.ஆழ்வார்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவின் பாராட்டு விழாவை ஏற்றுக்கொண்டு, ஏற்புரையுடன் கூடிய வாழ்த்துரையை கல்லூரி செயலாளர் மூ.விஜயரா கவன் வழங்கினார். விழா வின் சிறப்பு விருந்தினராக மதுரை தமிழ் இலக்கிய மன் றத்தின் நிறுவனர் அவனி மாடசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதனை தொடர்ந்து சிறந்த ஆசிரியர்கள், சிறந்த துறை, சிறந்த சமூக சேவகர், சிறந்த ஆய்வுக்கட்டுரை யாளர், சிறந்த ஆய்விதழ் கட்டுரையாளர் என தனித்த னியாக பல்வேறு விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங் கப்பட்டது. நிறைவாக சுய நிதி பிரிவு இயக்குனர் ச.பிரபு நன்றி கூறினார்.

    விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் செ.செந்தில் குமார் தொகுத்து வழங்கி னார். விழாவிற்கான ஏற்பா–டுகளை கல்லூரி முதல்வர் அ.ராமசுப்பையா சிறப்பாக செய்திருந்தார். இதில் திர ளானோர் கலந்து கொண்ட னர்.

    • வாசுதேவநல்லூர் திருவள்ளுவர் மன்றத்தின் 17 -ஆம் ஆண்டின் தொடக்கவிழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்றத்தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் திருவள்ளுவர் மன்றத்தின் 17 -ஆம் ஆண்டின் தொடக்கவிழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    திருவள்ளுவர் மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் படத்தை ஆசிரியர் வேலுச்சாமி திறந்துவைத்தார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நல்லாசிரியர் மோகன சுந்தரம், ஆசிரியர் ராமர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, சரவணன், பாவாணர் கோட்டப் பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இணை செயலாளர் புலவர் சந்திரன் நினைவு பரிசுகள் வழங்கினார்.பேரூராட்சி மன்றத்தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் பிள்ளை யார்சாமி, நகரச் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், சுமங்கலி கோமதி சங்கர், சாமிநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×