search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S.Thangapazham Matriculation School"

    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், பள்ளி தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் பாலத்தாய் தங்கப் பழம், ரம்யா முருகேசன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜகயல்விழி வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், இக்காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் கிராமப்புறங்களில் பெண் கல்வியின் முக்கியத்து வத்தையும், தமிழக முதல்-அமைச்சரின் தன்னார்வலர்களை கொண்டு செயல்படும் இல்லம் தேடி கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினார்.

    இவ்விழாவில் பள்ளி யின் சார்பில் பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றி தழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். விழாவில் பள்ளி மாண வர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி களை கண்டு களித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×