என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "S.Thangapazham Matriculation School"
- வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், பள்ளி தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் பாலத்தாய் தங்கப் பழம், ரம்யா முருகேசன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜகயல்விழி வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், இக்காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் கிராமப்புறங்களில் பெண் கல்வியின் முக்கியத்து வத்தையும், தமிழக முதல்-அமைச்சரின் தன்னார்வலர்களை கொண்டு செயல்படும் இல்லம் தேடி கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினார்.
இவ்விழாவில் பள்ளி யின் சார்பில் பல்வேறு சாதனைகளை புரிந்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றி தழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். விழாவில் பள்ளி மாண வர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி களை கண்டு களித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்