search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே  சிறப்பு கால்நடை சுகாதார  விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


    வாசுதேவநல்லூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கால்நடைகளுக்கு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தப்ப ட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குமாரி, தலைமை கால்நடை மருத்துவர் கருப்பையா, கிளை செயலாளர் கார்த்திக், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×