search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarakhand"

    • சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
    • சுரங்கத்தில் வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை.

    உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உள்ளனர்.

    சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மீட்பு பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்காக 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை போடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் இந்த குழாய் மூலம் அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது ஒருபுறம் இருக்க, "சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகிவிட்டன. ஊழியர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. கட்டுமான தளத்தில் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை வெளியேறுவதற்கான வழி திட்டத்தில் இருப்பின் ஏன் அதனை அமைக்கவில்லை."

    "களத்தில் உள்ள மீட்பு படையினர் மற்றும் பொறியாளர்களுக்கு நான் எனது முழு ஆதரவை வழங்குகிறேன். இந்த விஷயத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. பேரிடர் மீட்பு திட்டங்கள் எதுவும் இல்லை, அவர்களிடம் வல்லுனர்கள் யாருமே இல்லை. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று உத்தரகாண்ட் மாநில எதிர்கட்சி தலைவர் யாஷ்பால் ஆர்யா தெரிவித்து இருக்கிறார். 

    • துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை.
    • அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.

    உத்தரகாண்ட் மாநிலம், உத்தரவாசி மாவட்டத்தில் உள்ளது, ஜகோல் என்ற கிராமம். இங்கு மகாபாரத இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ள, கவுரவர்களின் வரிசையில் முதன்மையானவனான துரியோதனனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுரவர்களை தங்கள் மூதாதையர்களாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் இந்த ஆலயத்தை துரியோதனனுக்காக கட்டியதாக சொல்லப்படுகிறது.

    ஒரு முறை துரியோதனன் இந்த பகுதியை தாண்டி சென்ற போது, இதன் இயற்கையான அழகில் மயங்கினான். அங்குள்ள உள்ளூர் தெய்வமான மஹசு என்பவரிடம், இமயமலையை ஒட்டி தனக்கென ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் என்று வேண்டினான். அதற்கு அந்த தெய்வம், 'தான் இடம் அளிப்பதாகவும், இந்த பகுதி மக்களை நீ காக்க வேண்டும்' என்று கூறியது. அந்த வாக்கின் படி துரியோதனனுக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கில் தான் அவனுக்கான ஆலயமும் அமைந்திருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அந்த நீர் பெருகி, ஏரியாக உருவானது. அதன் பெயர் 'தமஸ்'. இந்த வார்த்தைக்கு 'துன்பம்' என்று பெயர். இங்கு துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை. ஆனால் அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது.
    • மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம். ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யாத்திரையாக பக்தர்கள் மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.

    சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்ல முடியாததால், ருத்ரபிரயாக்கில் உள்ள கவுரிகண்ட் பகுதியிலிருந்து 22 கிலோமீட்டர் மலை வழியில் ஏறி செல்ல வேண்டும். கவுரிகண்ட் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 3 கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும், பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை குழு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    தற்போது வரை இடிபாடுகளில் 3 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.

    "காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது" என்று ருத்ரபிரயாக் பகுதி காவல் கண்காணிப்பாளர், டாக்டர் விசாகா கூறியுள்ளார்.

    மழையினாலும், ஆங்காங்கே சரிந்து விழும் பாறைகளினாலும் மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

    • ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
    • ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசில் கமிஷனர் மற்றும் நிதித்துறை செயலராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.

    இதையடுத்து அவர் கவனித்து வந்த நிதித்துறை முதன்மை தேர்தல் அதிகாரி ஜவகர், திட்டம் மற்றும் ஆராய்ச்சி, பொருளா தாரம் மற்றும் புள்ளிவிபரம் ஆகிய துறைகளை அரசு செயலர் முத்தம்மா, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா துறைகளை அரசு செயலர் மணிகண்டன் ஆகியோர் லிங்க் அதிகாரி அடிப்படையில் கவனிப்பார்கள்.

    இதற்கான ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சோகம்.
    • 21 பேர் மீட்கப்பட்டனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

    பவுரி கர்வால்:

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம், லால்தாங் பகுதியில் இருந்து நேற்றிரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர். பிரோகல் பகுதியில் சிம்ரி என்ற இடத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 21 பேர் இரவோடு இரவாக உயிருடன் மீட்கப்பட்டதாக டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • முதல்வரின் உத்தரவின் பேரில் புல்கிட் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டது.
    • பாஜக தலைவர் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

    ஹரித்வார்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண்ணின் உடல் கால்வாய் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை விரைவு படுத்தினர்.

    விசாரணையில் அந்த பெண்ணின் கொலையில், அந்த பெண் வேலைபார்த்த விடுதியின் முதலாளியான புல்கிட் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதியும் இடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து பாஜக தலைவர் வினோத் ஆர்யா மற்றும் அவரது மற்றொரு மகன் அன்கிட் ஆர்யா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

    • பேருந்து விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்
    • உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் சிவராஜ் சிங் சவுகான்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உத்தரகாண்ட் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உடல்களை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார்.
    • கங்கோத்ரி, யமுனோத்ரியில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சார்தாம் தலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவு யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில் யமுனோத்ரி நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த 22 பக்தர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    6 மாத கால இடைவெளிக்குப் பிறகு கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது. அதன்பின்னர் கேதார்நாத்தில் மே 6 ஆம் தேதியும், பத்ரிநாத்தில் மே 8 ஆம் தேதியும் நடை திறக்கப்பட்டது.

    55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது. 

    புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும்  என்பதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தமது பதவியை ராஜினாமா செய்தார். 

    இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில்  புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் புஷ்கர்சிங் தாமி முன்னிலை பெற்றார்.  13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தாமி 57,268 வாக்குகளும், கஹ்டோரி 3,147 வாக்குகளும் பெற்றிருந்தனர். 

    வாக்கு எண்ணிக்கை முடிவில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.  

    தமது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமி, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், தமது ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். 

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் இடைத்தேர்தலில் வாக்குகள் மூலம் நீங்கள் (வாக்காளர்கள்)  கொடுத்த அன்பு மற்றும் ஆசீர்வாதத்தால் என் இதயம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டது, நான் அமைதியாக இருக்கிறேன் என்றும் அவர்  தெரிவித்தார்.

    இந்நிலையில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் புஷ்கர்சிங் தாமி புதிய சாதனை படைத்துள்ளதாகவும், இதற்காக பாராட்டுவதாகவும், பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
     
    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதி அன்று மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அன்று பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27வது மாநிலமாக உத்தரகாண்ட் உருவானது.

    அன்று முதல், ஆண்டுதோறும் நவம்பர் 9-ம் தேதி அன்று உத்தரகாண்ட் மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, உத்தரகாண்ட் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்,

    உத்தரகாண்டில் மலை நீரும், இளைஞர்களின் விடாமுயற்சியும் ஆதாரமாக இருப்பதே மாநில வளர்ச்சிக்கு சான்றாகும். இயற்கையின் மடியில் உள்ள மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் முன்னேற விரும்புகிறேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #KedarnathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கோவில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில், வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார்நாத் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இரவு நேரங்களில் சுமார் 3000 பக்தர்கள் தங்கும் வகையில், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    கோடை காலம் தொடங்கியபோதிலும், கேதார்நாத் கோவில் வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான, சார்தாம் யாத்திரை நேற்று முன்தினம் அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது. முதல் நாளில் கங்கோத்ரி கோவில் நடை காலை 11.30 மணிக்கு திறக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியிருக்கிறது. பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை நாளை (9-ம் தேதி) திறக்கப்படுகிறது.



    ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள். #KedarnathTemple #CharDhamYatra




    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தால் சுமார் 100 பேர் பலியாகிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. #HoochTragedy
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

    முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார். சுமார் 100 உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும என்றும் அவர் கூறினார். #Uttarakhand #UttarPradesh #hoochtragedy 

    ×