என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உத்தரகாண்ட் மாநிலத்தில் கோர விபத்து- பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்5 Oct 2022 3:02 AM GMT
- திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சோகம்.
- 21 பேர் மீட்கப்பட்டனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
பவுரி கர்வால்:
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம், லால்தாங் பகுதியில் இருந்து நேற்றிரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர். பிரோகல் பகுதியில் சிம்ரி என்ற இடத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 21 பேர் இரவோடு இரவாக உயிருடன் மீட்கப்பட்டதாக டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X