search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "torture"

    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி டெய்சிராணி. இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தில் வீடுகட்டியுள்ளனர். கணவரின் சகோதரர் தேவராஜ் என்பவர் தேவைக்காக அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

    அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்த நிலையில் மேலும் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை திருப்பித்தர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து கலெக்டரிடம் மனுஅளிக்க அறிவுறுத்தினர். அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை காந்திசிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இருந்தபோதும் பிரச்சினை தீராததால் சேகர் கடும் மனஉளைச்சலில் இருந்தார். இன்று வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்து அவரது மனைவி டெய்சிராணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சேகரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பளுகல் அருகே சிறுமியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்து முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    பளுகலை அடுத்த ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன்(வயது77). தொழிலாளி. இவர் கடந்த 28-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல கூடாது என ஜாண்சன் சிறுமியை மிரட்டில் உள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் முதியவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    மேலும் சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறும்போது, தான் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது முதியவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வருமாறு கூறினார். அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனை வெளியில் சொல்ல கூடாது என மிரட்டினார். இவ்வாறு இந்த சிறுமி கூறி அழுதார். இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் முதியவர் ஜாண்சன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்ததையடுத்து முதியவர் ஜாண்சன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாகி உள்ள ஜாண்சனை போலீசார் தேடி வருகின்றனர்.
    காதலிப்பதாக கூறி பிளஸ்-1 மாணவிக்கு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 18). பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுத்து மற்றும் போலீசார்சார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் முத்துக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பழனியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி பழைய ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது55). பழைய ஆயக்குடி அருகே அண்ணாநகர் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவனை தனது அறைக்கு அழைத்துள்ளார்.

    சிறுவனை அறையில் வைத்து ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் சத்தம் போட்டான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர்.

    சிறுவனை பரமேஸ்வரனிடம் இருந்து மீட்டனர். பின்பு பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பரமேஸ்வரன் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைதொடர்ந்து பரமேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தொல்லை தரக்கூடாது என போலீசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Thoothukudifiring #MaduraiHC
    மதுரை:

    நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டம் நடந்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் பலியானார்கள்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமானோர் கைதாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது.


    போலீசாரின் இந்த தொந்தரவு காரணமாக அந்த குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளனர். எனவே குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்தினரை காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அந்த மனு இன்று நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் ஸ்டெர்லைட் தொடர்பான போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்திற்கு காவல் துறையினர் தொல்லை தரக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். #Thoothukudifiring #MaduraiHC
    சீர்காழி அருகே காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த தொழிலாளி குறித்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேலவளவுகுடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கொடி செல்வி (24) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 18.1.2018 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு அன்பரசன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். உனது பெற்றோரிடம் சென்று புது மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை வாங்கி வா என்று கூறி செங்கொடி செல்வியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதனால் வேதனையடைந்த அவர் இது பற்றி சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அரியாங்குப்பம்:

    புதுவை நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி படகு குழாமில் படகு சவாரி செய்ய கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஆனந்த் என்ற அலெக்ஸ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உதயசெல்வன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டியை சேர்ந்தவர் சபிதா (வயது30). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை மந்திச்சுணையை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த நகைகளை வேல்முருகனின் தாயார் லட்சுமி வாங்கி வைத்துள்ளார்.

    மேலும் வேல்முருகனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சபிதா தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்றால் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும். இல்லையென்றால் விவாகரத்து செய்து விடுவதாக கூறி சித்ரவதை செய்துள்ளார்.

    இதற்கு வேல்முருகனின் தந்தை அழகுபாண்டி மற்றும் உறவினர் கேசவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சபிதா உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×