search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "torture"

    சவுதிஅரேபியாவில் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி சித்ரவதையால் அவதிப்படுவதாக வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மக்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா. 2017-ம் ஆண்டு வேலைக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார்.

    தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. இரவும் பகலும் என்னை சுற்றி ஏராளமான விலங்குகள் உள்ளன. ஒரு ஒட்டகம் இறந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த பணியாளர் ஒருவர் என்னை சரமாரியாக அடித்து தாக்கினார். எனக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது வீரய்யாவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ரியாத்தில் உள்ள தூதரகம் மூலம் வீரய்யாவை மீட்கும் பணி நடந்து வருவதாக நவ்தீப் சூரி பதில் அளித்தார்.

    வீரய்யாவை போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை என்றும் இதையடுத்து வீரய்யாவின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், விசா ஆவணங்களை தூதரக அதிகாரிகள் கேட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் நவ்தீப் சூரி தெரிவித்தார்.

    வீரய்யா வெளிட்ட வீடியோ சவுதியில் உள்ள ஒரு பாலைவன பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரய்யாவின் பின்னால் 100-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்கிறது. இந்த பகுதி ஜோர்தான் எல்லையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    வளைகுடா- தெலுங்கானா பொது நல மற்றும் கலாசார கூட்டமைப்பின் தலைவர் பட்குரி பசந்த் ரெட்டி, சவுதி அரேபியாவில் உள்ள தெலுங்கு மக்கள் மூலம் வீரய்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.

    தூதரக அதிகாரிகள் குழுவை அனுப்பி வீரய்யாவை கண்டு பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பசந்த் ரெட்டி கூறினார்.

    வீரய்யாவின் தாயார் கடந்த மார்ச் 30-ந்தேதி இறந்துபோனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு கூட வீரய்யாவை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள்.

    தற்போது அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    ஈரோட்டில் மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆராய்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சேர்ந்த 21 வயது பெண் கடந்த 2015-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி அருகே உள்ள கடைக்கு அடிக்கடி அவர் சென்று வந்தார்.

    அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.

    பின்னர் ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள் அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது அந்த மாணவியிடம ஆபாச வீடியோவை காட்டி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் விரிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இவ்வாறாக 4 வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்தார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்தார்.

    மேலும் தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நல்லம்பள்ளி அருகே சொத்தை பிரித்து தரும்படி மாமியார் மற்றும் மனைவி அடிக்கடி தொந்தரவு செய்ததால் கல்லூரி மாணவர் மாயமானார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சாமிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அரவிந்த் (வயது 21).

    இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் அதேகல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் தாமரைக்கொடி என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 

    பின்னர், தாமரைக்கொடி வீட்டிலேயே அரவிந்த் தங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து தாமரைக்கொடியும், அவரது தாயும் சேர்ந்து அரவிந்தனிடம் அவரது சொத்துக்களை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பிரித்து வாங்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி அரவிந்த் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தொலைபேசியில் அழைத்து எனது மனைவியும், மாமியாரும் சொத்தை பிரித்து தரும்படி, தொந்தரவு செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். பின்னர் அரவிந்த் தொலைபேசியின் அழைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து அரவிந்த் அவரது மனைவி வீட்டிற்கும் செல்லவில்லை, அவரது தந்தை வீட்டிற்க்கும் செல்லவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி பல இடங்களில் தேடிப்பார்த்தும் அரவிந்த் கிடைக்கவில்லை. இது குறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் எனது மகனை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்ட கேரள பெண் வழக்கில் கைதானவர் வெளியில் நடமாடுவதாக எழுந்த பிரச்சினையால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் எம்.எம். தெருவைச் சேர்ந்தவர் ரோகினி (வயது 42). கேரளாவைச் சேர்ந்த இவர் தனது கணவர் மற்றும் 9 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். 7 மகள்களுடன் ரோகினி தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

    தான் இறப்பதற்கு முன்பாக கைப்பட கடிதம் எழுதி வைத்து தனது தற்கொலைக்கு ஜெயசீலன் மட்டுமே காரணம் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து 3 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த ஜெயசீலனை போலீசார் பிடித்து சென்றனர்.

    கைதான ஜெயசீலன் நேற்று கொடைக்கானல் நகரில் சுற்றி வந்ததாகவும் அதன் பிறகு அவரது வீட்டில் மனைவி மற்றும் மகள்களை பார்க்க வந்ததாகவும் தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அவரது வீட்டு முன்பு ஏராளமான பெண்கள் குவிந்தனர். வீட்டுக்குள் இருக்கும் ஜெயசீலனை வெளியே அனுப்புமாறு அவர்கள் சத்தம் போட்டனர். இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஜெயசீலனை கைது செய்து விட்டதாக கூறிய போலீஸ் அவரை தற்போது வெளியில் நடமாட விட்டுள்ளனர். அவர் வீட்டுக்குள் ஒளிந்திருந்ததை நாங்கள் பார்த்தோம்.

    எங்களை பார்த்தவுடன் தப்பி அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் பிடியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரது கொடுமையால் இது வரை பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் நடத்திய பெண்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    எனவே ரோகினியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என ஆவேசமாக கூறினர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ராமநாதபுரம் அருகே கடனை கேட்டு துன்புறுத்தியதால் பா.ஜனதா நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகேயுள்ள காருகுடியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (வயது42). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பா.ஜனதா கட்சியின், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் காருகுடி தென்னந்தோப்பு பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். அவர், ‘‘நான் பணப்பிரச்சினையால் கடன் வாங்கியிருந்தேன். என்னை அடித்து அவமானப்படுத்தியதால் மன வேதனையடைந்தேன். என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிய லாரி உரிமையாளர் பக்ருதீன், கலீல் மற்றும் சிலர் மீது பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானலில் பாலியல் தொந்தரவால் கேரள பெண் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மாப்பிள்ளை முதலியார் தெருவைச் சேர்ந்த சாஜ் மனைவி ரோகினி (வயது 40). இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். கணவரும் முத்த மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ரோகினியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் அக்கம் பக்கத்தில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அடிக்கடி செல்போனில் ரோகினியிடம் தவறான முறையில் பேசி வந்தார். கணவர் வெளியூரில் வசிப்பதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி தொந்தரவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

    ரோகினி தனது அறையில் கைப்பட மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் தனது சாவுக்கு ஜெயசீலன்தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். எனவே ஜெயசீலன் பாலியல் தொந்தரவு செய்ததால் அவர் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தந்தை மற்றும் மகனை தாக்கி சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ரவி. இவரது மனைவி அம்பிகா.

    கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி அம்பிகா கொலை செய்யப்பட்டார். இவர் போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிகள் குறித்து புகார் செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் மகன் கண்முன்னே போலீஸ் உடையில் வந்த 2 பேரால் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக ரவி, அவரது மகனை மாங்காடு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தன்னையும், மகனையும் தாக்கி சித்ரவதை செய்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ரவி புகார் அளித்தார்.

    அதில் எனது மனைவி கொலை தொடர்பாக என்னையும், மகனையும் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது எங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்தனர்.

    பின்னர் எங்களை தாக்கி சித்ரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். 2012-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்தனர். அதன்பின் எனது உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் பிப்ரவரி 7-ந்தேதி விடுவித்தனர்.

    எனவே இதில் சம்பந்தப்பட்ட சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அழகு, மாங்காடு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார், லாரன்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டு போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயசந்திரன் அளித்த தீர்ப்பில் சாட்சியம் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது 4 போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

    இதனால் அவர்கள் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.3 லட்சத்தை ரவிக்கும், ரூ.1 லட்சத்தை அவரது மகனுக்கும் தமிழக அரசு 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.

    இந்த தொகையை போலீஸ் அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வல்லக்குளத்தைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 28). இவருக்கும், விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் வைதேகி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக 10 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டனர். அதனை தாய் வீட்டில் இருந்து வாங்கிக் கொடுத்தேன்.

    கடந்த 2013-ம் ஆண்டு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்தேன். அப்போது எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க இதுவரை கணவர் வரவில்லை.

    இது குறித்து கேட்டால் ரூ.50 ஆயிரம் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கணவர் கூறினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் சீனிவாசன்-ராஜேஸ்வரி, மைத்துனர் ஜெயக்குமார் ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் செந்தில்குமார் உள்பட 4 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த முகமது கவுஸ்மைதீன் என்பவரது மகள் நிலோபர் காமு (வயது27). இவர் பழனி அருகில் உள்ள சின்னகாந்திபுரம் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வத்தலக்குண்டுவில் இருந்து பழனிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    அப்போது தனியார் பஸ் கண்டக்டரான பெரியகுளம் தென்கரை இந்திரா நகரை சேர்ந்த பாண்டி மகன் செல்லத்துரை (வயது32). அவரை காதலிப்பதாக கூறி உள்ளார். ஆனால் இதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இருந்தபோது தினமும் பஸ்சில் வரும்போது ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவருக்கு தெரியாமலேயே அவரது செல்போன் எண்ணை பெற்று அதில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் செல்லத்துரையை தேடி வருகின்றனர்.

    தருமபுரியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி நகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பி.ஆர். சுந்தரம் தெரு, முஹம்மது அலி கிளப் ரோடு, ஆறுமுகம் ஆசாரி தெரு, பென்னாகரம் மெயின் ரோடு,  நகர் மற்றும் புறநகர் பஸ் நிலையங்களில் சுற்றிதிரிகின்றன. காலை, இரவு நேரங்களில் தனியாக நடந்து வருபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களை இந்த நாய்கள் துரத்தி செல்கின்றன. சில சமயங்களில் சில நாய்கள் கடித்து கொதறுகின்றது. 

    இந்த நாய்கள் நகராட்சி குப்பை வண்டிகளை கண்டால் வண்டியில் பின்னால் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. குப்பை வண்டியில் வரக் கூடிய கழிவுகள் மற்றும் இறைச்சிகளை நாய்கள் உண்கின்றன. 

    இத்தகைய நாய்கள் பொதுமக்களை கடித்தாள் தொற்று நோய் பரவி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தேனி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தம பாளையம் நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். அதே பகுதியில் மன வளர்ச்சி குன்றிய 26 வயது பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தங்க பாண்டியன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண்ணின் உறவினர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கபாண்டியனை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி டெய்சிராணி. இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தில் வீடுகட்டியுள்ளனர். கணவரின் சகோதரர் தேவராஜ் என்பவர் தேவைக்காக அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

    அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்த நிலையில் மேலும் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை திருப்பித்தர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து கலெக்டரிடம் மனுஅளிக்க அறிவுறுத்தினர். அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை காந்திசிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இருந்தபோதும் பிரச்சினை தீராததால் சேகர் கடும் மனஉளைச்சலில் இருந்தார். இன்று வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்து அவரது மனைவி டெய்சிராணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சேகரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×