search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl molestation"

    திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆகும். திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்.

    இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார்.

    இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர். அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார்.

    இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரிசெய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென்றார். அங்கு அவர்களது பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

    இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய்விடும் என்று தெரிவித்தார். ஆனால், ‘கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, எனவே எனது பாதுகாப்பில் அவள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இதை நம்பிய அவர்கள், தங்களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த இளம்பெண்ணை சாமியார் ஓங்கூருக்கு அழைத்து வந்தார். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-வது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகையால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.

    இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் ஆசைக்கு இளம்பெண்ணும் சம்மதிக்கவில்லை. எனவே அவரிடம், உனது அண்ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம்பெண்ணை கற்பழித்தார்.

    இது குறித்து தனது தந்தையிடம் இளம்பெண் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஹேமாவையும் கைது செய்தார்.

    பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளார்.

    சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசேன் (வயது 30), லாரி டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர், அதே கிராமத்தை சேர்ந்த வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அன்றே புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அசேனை தேடி வந்தனர். இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புதிய சப்-இன்ஸ்பெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார். கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாகி உள்ளவர்களை தேடி பிடிக்குமாறு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தனிப்படை அமைத்து பழைய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மதகொண்டப்பள்ளி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாக இருந்த அசேன் ஓசூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அசேனை சுற்றி வளைத்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    தேனி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தம பாளையம் நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். அதே பகுதியில் மன வளர்ச்சி குன்றிய 26 வயது பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தங்க பாண்டியன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண்ணின் உறவினர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கபாண்டியனை தேடி வருகின்றனர்.

    கை-கால்களை கட்டிப்போட்டு இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கீழமாளிகை கிராமத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முரளி (வயது 24). சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு  வந்த உறவினர் மகளை, முருகேசன் அங்குள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றதோடு, வாயில் துணி வைத்தும், கை கால்களை கட்டி போட்டும் பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

    இதனால் அந்த பெண் இதுபோல் செய்து விட்டாயே? என்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என கேட்டு அழுதபோது, வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், தானே திருமணம் செய்து கொள்வதாக கூறி தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுடன் முரளி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார்.

    இந்நிலையில் கடந்த 13-ந்தேதி உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முரளி திருமணம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக முரளியிடம், பாதிக்கப்பட்ட பெண் தட்டிக்கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

    இதையடுத்து அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குபதிவு செய்து முரளியை கைது செய்து விசாரித்து வருகிறார்.
    ஊட்டியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் எதிரே பல் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சரவணன். அரசு டாக்டராகவும் உள்ளார்.

    இவரது மருத்துவமனைக்கு ஊட்டியை சேர்ந்த இளம் பெண் தனது தாயுடன் சிகிச்சை பெற வந்தார். டாக்டர் சரவணன் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத நிலையில் அவரது தாய் பணம் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்று விட்டார்.

    திடீரென இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது இளம்பெண் தன்னிடம் டாக்டர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாக்டர் சரவணனை அடித்து உதைத்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டது.

    மேலும் மருத்துவமனையையும் சூறையாடினார்கள். தகவல் அறிந்து ஊட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் டாக்டரை தாக்கிய பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்றனர்.

    டாக்டர் சரவணனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×