என் மலர்
செய்திகள்

தேனி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
தேனி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி அருகே உத்தம பாளையம் நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். அதே பகுதியில் மன வளர்ச்சி குன்றிய 26 வயது பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று தங்க பாண்டியன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண்ணின் உறவினர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கபாண்டியனை தேடி வருகின்றனர்.
Next Story






