search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public impact"

    • வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காட்டில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையினால் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் களக்காடு ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்கு றிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

    முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வீடு களை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன.
    • மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட த்தில், கடற்கரைச் சாலை மற்றும் அதனை சுற்றியு ள்ள போக்குவரத்து மிக்க முக்கிய சாலைகள் அனைத்தும் கால்நடைகள் உலா வும் சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன. இத னால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதற்கு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை வேறு இடத்திற்கு அப்புறபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரைக்காலில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது மீறினால், மாடுகள் பறிமுதல் செய்ய ப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர். ஆனாலும் மாடுக ளை சாலைகளில் விடுவது இன்னும் அரங்கேறி வருகி றது. இதனால் அவைகளை சாலையில் சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடு க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

    • நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான் குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 137 கே திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
    • கலுங்குவிளையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாத்தான்குளம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

    நெல்லை:

    சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி, நெடுங் குளம், கொம்பன் குளம், கலுங்குவிளை வழியாக செல்லும் வழித்தடம் கிராம புற பகுதி என்பதால் ஒரு சில பஸ்கள் மட்டுமே உரிய நேரத்தில் இயக்கப்படுகின்றன.

    அதில் நெல்லையில் இருந்து பேய்க்குளம், பழனியப்பபுரம், விராக்குளம், கோமானேரி, கலுங்கு விளை, நெடுங் குளம் வழியாக இயக்கப் பட்ட அரசு பஸ் தடம் எண் 137 ஏ, நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான் குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 137 கே திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

    இதனால் கலுங்கு விளையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாத்தான் குளம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆதலால் அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் இதனை கவனித்து நெல்லையில் இருந்து கலுங்குவிளை வழியாக இயக்கப்பட்ட 137ஏ, 137 கே அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனி பாஸ் கூறுகையில், கலுங்கு விளை வழித்தடத்தில் இயக்கப்பட்டு நிறுத்தம் செய்யப்பட்ட பஸ்களை இயக்கிட கோரி கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டதன் பேரில் கடந்த வாரம் தடம் எண் 137ஏ இயக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் தரப்பில் முறையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டநிலையில் தற்போது இயக்கப்பட வில்லை. ஆதலால் அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது.
    • நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் லே-அவுட்டு பகுதியில் அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் ரங்கநாதன் லே-அவுட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் தற்பொழுது முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் மற்றும் பகல் நேரங்களில் விஷசந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில் வெயிலின் தாக்கம் தாக்க முடியாமல் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
    ஈரோடு:

    அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே கடும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியதும் மேலும் கூடுதலாக வெயில் கொளுத்தி வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 104 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் ஓரளவு தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வருகிறது.

    வெயிலை தாக்குப்பிடிக்க முடியாத ஒரு சில மக்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பார்க்க சென்ற வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், சர்பத், மோர், இளநீர் ஜூஸ் கடைகளில் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    காலை 9 மணி முதலே அனல் காற்றுடன் வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. வீட்டில் மின்விசிறி போட்டாலும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக உள்ளது இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வரும் 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் கொளுத்த உள்ளதால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர் கதையாகி வருகிறது. பகல், இரவு பாராமல் துண்டிக்கப்படும் மின்சாரம் பல மணி நேரம் தடை படுவதால் பொதுமக்கள் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    மின்தடையால் பல இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அரசூர், பொன்னேரி, மெதூர், தடப் பெரும்பாக்கம், வேன்பாக்கம், இலவம்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள். இரவில் புழுக்கத்தால் தெருக்களில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. 12 மணி நேர மின்தடை குறித்து மின் ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை.

    இதற்கிடையே அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பொன்னேரி துணை மின் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    சுமார் 1500 ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்து உள்ளோம். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மோட்டார்கள் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் மின்தடையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொன்னேரி போலீஸ் நிலையத்திலும் விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி கோட்ட உதவி செயற் பொறியாளர் பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த 11-ந் தேதி வேண் பாக்கம் துணை மின்நிலை யத்தில் டிரான்ஸ்பார்ம் வெடித்து விட்டது. இது பொருத்தப்பட்டு இரண்டு மாதம் தான் ஆகிறது இதை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை அல்லது நாளை பணி முடிவடையும். அதன்பின் சீராக மின் சாரம் வழங்கப்படும். அதுவரை பொன்னேரி துணை மின் நிலைய கோட்டத்தில் உள்ள ஆலாடு அரசூர், மேட்டுப் பாளையம், இலவம்பேடு, பெரும்பேடு, பொன்னேரி, தேவதானம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுழற்சிமுறையில் மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தாலும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையாலும் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் மின்தடையால் மேலும் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது.

    தற்போது முஸ்லிம்கள் நோன்பு காலத்தை கடைபிடித்து இரவில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது வேதனையை அளித்துள்ளது.

    பெண்கள் தனியாக செல்லவும், அதிகாலையில் நோன்பு வைக்கவும் சிரமப்படுகின்றனர்.

    இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடையால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக் கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேடசந்தூர் பகுதியில் இரவு நேர மின் தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்க மின்றி அவதிப்படுகின்றனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள விடுதலைப்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம், எத்திராம் பட்டி, கல்வார் பட்டி, எல்லப்பம் பட்டி, கோவில் பட்டி, கல்லுப்பட்டி, மாங்கலா புரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    சுமார் 2 முதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். பகல் வேளையிலும் மின் தடை ஏற்படுவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் மின்சாரம் இல்லாததால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள 24 மணி நேரமும் மின் விசிறியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வேளையில் மின்சாரம் தடைபடுவதால் போதுமான காற்றோட்டமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்க மின்றி அவதிப்படுகின்றனர்.

    மேலும் மின் தடையினால் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீரான மின் வினியோகம் செய்ய மின் வாரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மானாமதுரையில் ஏற்படும் தொடர் மின் தடையில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை காண ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர். இது தவிர வைகை ஆறு முழுவதும் மின்சார அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பக்தர்கள் மற்றும் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தரும் இடங்களில் கூடுதலாக மின்விளக்கு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    தொடர் மின்தடையால் மானாமதுரை நகர் முழுவதும் மின் வினியோகம் அடிக்கடை தடைப்பட்டது. வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளும் எரியாததால் பக்தர்கள் இருளில் பெரிதும் அவதிப்பட்டனர்.

    திருவிழா நேரத்தில் தொடர் மின் தடை செய்யக் கூடாது என பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பெருந்துறைபட்டில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணாபுரம்:

    வாணாபுரம் அருகே பெருந்துறைபட்டு உள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, கோவில் தெரு, பள்ளிக்கூடத் தெரு மற்றும் ஆலய வீதி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து 100க்கணக்கான குரங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்தது.

    இந்த குரங்குகள் வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கேபிள் வயர்கள், வீட்டிற்கு வரும் மின் வயர்களை சேதப்படுத்தியும் வருகின்றது.

    அப்பகுதியில் செல்பவர்களை குரங்குகள் துரத்தி துரத்தி கடிக்கிறது. மேலும் பள்ளி நேரங்களில் குரங்குகள் பள்ளி வளாகத்திற்குள் சென்று அசுத்தம் செய்கிறது. பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பிடுங்கி செல்கிறது.

    இதனால் மாணவர்கள் அன்றாடம் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக வனத்துறையினர் குரங்குளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.