search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thorns"

    • முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது.
    • நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் லே-அவுட்டு பகுதியில் அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் ரங்கநாதன் லே-அவுட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் தற்பொழுது முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் மற்றும் பகல் நேரங்களில் விஷசந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ×