என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி
    X

    மானாமதுரையில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி

    மானாமதுரையில் ஏற்படும் தொடர் மின் தடையில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை காண ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர். இது தவிர வைகை ஆறு முழுவதும் மின்சார அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பக்தர்கள் மற்றும் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தரும் இடங்களில் கூடுதலாக மின்விளக்கு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    தொடர் மின்தடையால் மானாமதுரை நகர் முழுவதும் மின் வினியோகம் அடிக்கடை தடைப்பட்டது. வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகளும் எரியாததால் பக்தர்கள் இருளில் பெரிதும் அவதிப்பட்டனர்.

    திருவிழா நேரத்தில் தொடர் மின் தடை செய்யக் கூடாது என பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×