search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை"

    • பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊருக்குசென்றார்
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் சி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ராஜ்குமார் (வயது 28) இவரது மனைவி ஜஸ்வர்யா (21) இருவரும் கள்ளக்குறிச்சியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊரான சி.என். பாளையத்திற்கு சென்றவர்கள் மீண்டும் கடந்த 3- ந் தேதி சி.என்.பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று கொண்டிருந்தனர்.

    தியாகதுருகம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அணிந்திருந்த துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் ஜஸ்வர்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது குறித்து ஐஸ்வர்யாவின் அண்ணன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஜஸ்வர்யாவின் கணவர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

    • தப்பியோடிய ஆந்திர பெண்ணை சக பயணிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
    • பயணிகளிடம் பணம் மற்றும் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    தக்கலை :

    குமரி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு பஸ்சுகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவி கள், வேலைக்கு செல்ப வர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருக்கிறது.

    பஸ்களில் நிலவும் இந்த கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பஸ்சில் பயணிப்பவ ரிடம் திருடர்கள் கைவரிசை காட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது போன்று கைவரிசை காட்டக்கூடிய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் பணம் மற்றும் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தக்கலை அருகே இன்று ஆசிரியை ஒருவரிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்க முயன்ற பெண்ணை சக பயணிகள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். வேர்கிளம்பி அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவர் தினமும் பணிக்கு தனது ஊரில் இருந்து அரசு பஸ்சில் சென்று வருவார். அதே போல் இன்றும் அவர் வழக்கம் போல் அரசு பஸ்சில் சென்றார்.

    குலசேகரத்தில் இருந்து குளச்சல் சென்ற அரசு பஸ்சில் அவர் பயணித்தார். காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியை பஸ்சில் நின்றபடி பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் 3 பெண்கள் உரசியபடி நின்றிருக்கின்றனர்.

    அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை நைசாக கழற்ற முயன்றனர். இதனால் உஷாரான ஆசிரியை கூச்சலிட்டார். அந்த நேரத்தில் ஆசிரியை பயணித்த பஸ் அழகிய மண்டபம் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.

    பஸ்சை டிரைவர் நிறுத்தியதும், ஆசிரியை யிடம் நகை பறிக்க முயன்ற 3 பெண்களும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 2 பெண்கள் வேறு பஸ்சில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். தன்னிடம் நகை பறிக்க முயன்றது குறித்து சக பயணிகளிடம் ஆசிரியை தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் நகை பறிக்க முயன்ற வர்களில் ஒரு பெண்ணை துரத்தி சென்று பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து பாண்டியன் மற்றும் போலீசார் வந்தனர்.

    அவர்களிடம் பிடிப்பட்ட பெண் ஒப்படைக்கப்பட் டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தன்னை பற்றிய தகவலை சரியாக கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் பெண் போலீசார் மூலம் அந்த பெண் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இதே போல் பஸ் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பெண்ணுடன் வந்த மற்ற பெண்கள் குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் ஆசிரியை யிடம் நகை பறிக்க முயன்ற பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அழகிய மண்ட பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவனின் தாயார் உள்பட 2 பேர் மீது வழக்கு
    • சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    பள்ளியில் அவர் சரிவர படிக்காததையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவனை தனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் மாணவன் பெற்றோரை அழைத்து செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது மாணவனிடம் பெற்றோரை ஏன் அழைத்து வரவில்லை என்று ஆசிரியை கேட்டுள்ளார்.

    உடனே மாணவன் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. பின்னர் மாணவனின் தாயாரும், வாலிபர் ஒருவரும் பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் உள்ள முதல்வர் அறைக்கு வந்த அவர்கள் ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென மாணவரின் தாயார் தான் காலில் கிடந்த செருப்பால் ஆசிரியையை அடிக்க முயன்றார்.

    அவருடன் இருந்த வாலிபர் ஸ்குருடிரை வரை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் மாணவனின் தாயார் வாலிபரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியை வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவனின் தாயார் மற்றும் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 448, 294 (பி), 352, 506 (2) ஐ.பி.சி. மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாணவரின் தாயாரையும், வாலிபரையும் பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டுள் ளனர். போலீ சார் தேடுவது அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள வாலிபர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ஒருவரை மாணவனின் தாயார் தாக்கமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்படுவதாக ஆசிரியை விளக்கம்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை திருப்தி தியாகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     

    மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை, "எனது தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். அந்த மாணவனை மத ரீதியில் துன்புறுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு அம்மாநில பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பள்ளி மூடப்படுவதை தொடர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கரு மாக்கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). பட்டதாரி. இவரது மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்ணவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி அவரது குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார். இங்கிருந்து அவரும் அவரது குழந்தைகளும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் ராஜாவும் அவரது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

    கத்திக்குத்து

    இந்த நிலையில் ராஜா நேற்று மாலை தனது மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை விடு முறையையொட்டி கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு போகலாம் என கூறி மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்ரி கணவருடன் சென்றார்.

    அவர்கள் சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகலூர்கேட் சக்தி நகர் அருகில் சென்றபோது மோட்டார்சைக்கிளை ராஜா நிறுத்தி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் எதிரிலேயே காயத்ரியை சரமாரியாக குத்தினார். அதன்பிறகு மகனை அழைத்துக்கொண்டு ராஜா மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சை

    இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆசிரியை காயத்ரியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் காயத்ரிக்கு ெதாடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    தலைமறைவாக உள்ள அவரது கணவர் ராஜாவை ராசிபுரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • துர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
    • ஆசிரியையின் இந்த உணர்வு பூர்வமான அர்ப்பணிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

    ராய்ப்பூர்:

    கிராமப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்றளவும் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்வி கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஆட்டோ டிரைவராக மாறி பஸ் வசதி இல்லாத கிராமங்களில் இருந்து குழந்தைகளை தினமும் பள்ளிக்கு இலவசமாக அழைத்து வருகிறார். இதற்காக அவர் காலையிலேயே பள்ளிக்கு வந்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார். பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு ஆசிரியரா?என எல்லோரையும் திரும்பி பார்க்கவைக்கும் இவருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

    இவரை போலவே வடமாநிலத்தில் ஒரு ஆசிரியை தினமும் 2 ஆறுகளை கடந்து சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறார் ,அவரது பெயர் சர்மிளா தோப்போ. சத்தீஸ்கர் மாநிலம் துர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளி வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு வராமல் பணி மாறுதல் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக சர்மிளா தோப்போ இதை ஒரு சவாலாக ஏற்று பணியில் சேர்ந்தார்.

    பள்ளியில் இருந்து அவரது வீடு சிறிது தூரம் உள்ளது. ஆனால் அவரால் வாகனத்திலோ, சைக்கிளிலோ பள்ளிக்கு செல்ல சாலை வசதிகள் எதுவும் இல்லை.

    இதனால் தினமும் தனது ஊருக்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓடும் 2 ஆறுகளை கடந்து தான் அவர் பள்ளிக்கு சென்று வருகிறார். அடர்ந்த காட்டுப் பகுதியில் பாறைகளுக்கு இடையே முட்டளவு ஓடும் தண்ணீரில் அவர் கஷ்டப்பட்டு நடந்து செல்கிறார். தோளில் கைப்பையை தொங்க விட்டுக்கொண்டு அவர் இந்த 2 ஆறுகளை கடந்து தான் பள்ளிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த சிரமங்களை எல்லாம் பொறுத்துக்கொள்வதாக ஆசிரியை சர்மிளா தோப்போ பெருமையுடன் கூறினார். ஆசிரியையின் இந்த உணர்வு பூர்வமான அர்ப்பணிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

    அந்த மாவட்ட கலெக்டர் அவரை வெகுவாக பாராட்டி உள்ளார். நிச்சயமாக சர்மிளா தனது பணியை நேர்மையாக செய்கிறார், இவரை போலவே மற்ற ஆசிரியர்களும் விசுவாசமாக பணியாற்றி சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என கூறி உள்ளார்.

    • சிவகாசி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார்.

    விருதுநகர்,

    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரி(வயது26) திருத்தங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார். இந்தநிலையில் முனீஸ்வரிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு முனீஸ்வரி தாய் இறந்து 3 மாதமே ஆகியிருப்பதால் தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் அவர் விரக்தி யுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

    • தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
    • 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.

    வெள்ளகோவில் :

    திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பெருமாள்புதூா் பகுதியை சோ்ந்த முருகேசன் மனைவி ஜீவா (வயது 43). இவா் ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.

    இந்நிலையில் இவா் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 24-ந்தேதி மாலை வீடு திரும்பி கொண்டிருந்தாா்.ஈரோடு முத்தூா் சாலை மு.வேலாயுதம்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2பேர் ஜீவா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனா்.இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஜீவா புகாா் அளித்தாா். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினா்.

    இதில் ஈரோடு மாவட்டம் பவானியை சோ்ந்த ஆறுமுகம், கோவை செல்வபுரம் சாலை ஜோதிபுரம் பாரதி நகரை சோ்ந்த மாரீஸ்வரன் (27) ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாரீஸ்வரனை தேடி வந்தனா்.இந்நிலையில் அவரை வெள்ளக்கோவில் போலீசார் நேற்று கைது செய்தனா்.

    • பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    • திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (வயது 33). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    அஜித்ராம் பிரதீப்புக்கும் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த சுவிதா கண்ணன் (28) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த னர்.

    இந்த நிலையில் அஜித் ராம் பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று சுவிதா கண்ணனிடம் மீண்டும் பணம் கேட்டு அஜித்ராம் பிரதீப் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் மனைவியை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சுவிதா கண்ணன் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சுவிதா கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார். அதில் உனது தந்தை வீட்டு பத்திரத்தை மாற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என கணவர்மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டிரைவர் மீது வழக்கு
    • பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை

    கன்னியாகுமரி:

    தமிழக அரசு மகளிர் பயன் பெறும் வகையில் இலவச பஸ் சேவையை இயக்கி வருகிறது. இந்த பஸ்சை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த பஸ்கள் நிறுத்தங்களில் நிற்பதில்லை, கண்டக்டர்கள், இலவச பய ணம் என்பதால் பெண்களை சரியாக மதிப்பதில்லை என பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ்சில் ஏற முயன்றபோது ஆசிரியை ஒருவர் தவறி கீேழ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பஸ், திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கி பகுதி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் சென்று நின்றது. இதனால் ஓடி சென்று ஏற முயன்ற தனியார் பள்ளி ஆசிரியை மேரி கிளாட்லின், படிக்கட்டில் கால் வைத்த போது தவறி விழுந்து காயம் அடைந்தார்.

    அவரை அந்த பகுதி யில் நின்ற மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் காயமடைந்த ஆசிரியை மேரி கிளாட்லின் ஆவேச மடைந்து இலவச பேருந்து நாங்கள் கேட்கவில்லை, பெரும்பாலான பேருந்துகள் பெண்கள் நின்றால் பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.

    நிறுத்தத்தை தாண்டி நிறுத்திய பேருந்தில் ஏற முயன்ற போது தான் எனக்கு உடம்பு முழுவதும் காயமும் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் அங்கு நின்று அழுதபடி கூறினார். இது தொடர்பாக அவர் சம்மந்தப்பட்ட பணிமனை யிலும் புகார் அளித்தார்.

    திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட பஸ் திருவட்டார் பணிமனையை சேர்ந்தது என தெரியவந்தது. பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டாறு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சரியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்றும் தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்களும் காத்து நின்றால் பஸ்கள் வருவதில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வெகு தூரம் நடந்து சென்று மாற்று இடத்தில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ
    • வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடனம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மதுரை அருகே உள்ள பள்ளி ஒன்றில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து பள்ளியி லிருந்து வேனில் மாணவ- மாணவிகள் மதுரைக்கு புறப்பட்டனர்.

    மாணவ-மாணவிகளுடன் ஆசிரியைகளும் சென்றிருந்தனர்‌. மதுரை அருகே ஓட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவ மாணவிகள் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். மாணவ-மாணவி களு டன் ஆசிரியை ஒருவரும் நடனம் ஆடினார். மாணவ மாணவிகள் கூச்சல் சத்தத்துடன் நடனம் ஆடி கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ தற்பொ ழுது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியை மாணவர் ஒரு வரின் கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது. மேலும் மாணவ மாணவிகள் நடன மாடும் வீடியோவும் வைர லாகி உள்ளது.

    வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடு ரோட்டில் மாணவர்களு டன் ஆசிரியை நடன மாடும் சம்பவம் பெற்றோர் கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    • ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது.
    • வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது. போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத போது வேதாரண்யம் மீன், உப்புக்கு இந்த ரயிலே பிரதானம்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ரயில் தடம் ரூ. 288 கோடி செலவில் 10 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக மாற்றும் வேலை தொடங்கியது.

    இப்போது வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.

    நேற்று 22.10.22 திருத்து றைப்பூ ண்டியிலிருந்து மதியம் 1 மணிக்குசோதனை ஓட்டம் தொடங்கி அகஸ்திய ம்பள்ளி வரை மாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    அதனை வரவேற்கும் நிகழ்ச்சியாக அண்டா்காட்டை சோ்ந்த பல்வேறு விருதுகளை பெற்ற நல்லாசிரியர் மு.வசந்தா பள்ளி மாணவ, மாணவி்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் ரயில் சேவையை வரவேற்கும் வகையிலங கவிதை பாடி வரவேற்றார்.

    ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, தடக் தடக் ரயிலே ஓடி வா, தங்க ரதமே ஓடி வா, கூக்கூ ரயிலே ஓடி வா, கூட்ஸ் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ஆதிரெங்கனை வழிபட்டு வா, மேலமருதூரில் மிதந்து வா, கரியாப்பட்டினத்தை கடந்து வா, குரவப்புலத்தில் நின்று வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, நெய்விளக்கின் ஒளி கொண்டு வா, தோப்புத்துறையை தொட்டு வா, திருமறைக்காட்டு மான் போல் வா, அகத்தியா் பாதம் தொட்டிட வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா என கவிதை பாடியுள்ளார்.

    ×