search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் மாணவ-மாணவிகளுடன் ஆசிரியை குத்தாட்டம்
    X

    கோப்பு படம் 

    நடுரோட்டில் மாணவ-மாணவிகளுடன் ஆசிரியை குத்தாட்டம்

    • சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ
    • வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடனம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் மதுரை அருகே உள்ள பள்ளி ஒன்றில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தயாரானார்கள். இதையடுத்து பள்ளியி லிருந்து வேனில் மாணவ- மாணவிகள் மதுரைக்கு புறப்பட்டனர்.

    மாணவ-மாணவிகளுடன் ஆசிரியைகளும் சென்றிருந்தனர்‌. மதுரை அருகே ஓட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவ மாணவிகள் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். மாணவ-மாணவி களு டன் ஆசிரியை ஒருவரும் நடனம் ஆடினார். மாணவ மாணவிகள் கூச்சல் சத்தத்துடன் நடனம் ஆடி கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ தற்பொ ழுது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியை மாணவர் ஒரு வரின் கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது. மேலும் மாணவ மாணவிகள் நடன மாடும் வீடியோவும் வைர லாகி உள்ளது.

    வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடு ரோட்டில் மாணவர்களு டன் ஆசிரியை நடன மாடும் சம்பவம் பெற்றோர் கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×