search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுர்ணமி"

    • சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.
    • இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் திருநரையூர் உள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    இங்குள்ள தலமூர்த்தி சித்தநாதரை நோக்கி பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கச் சித்தர் இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தார்.

    அவர் முன்பு தோன்றி தரிசனம் கொடுத்ததால் பரமேஸ்வரருக்கு சித்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இத்தல மூர்த்திக்கு சாதாரணமாக ஒரு குடம் நீரை அபிஷேகம் செய்வித்து அதனை பிரசாதமாக நாம் குடித்தால் நம் உடம்பில் உள்ள அனைத்துவிதப் பெரிய ரோகங்களும் தீரும் என்று சொல்கிறார்கள்.

    பாண்டிய நாட்டு மன்னர் சந்திரகுப்தன் குஷ்டரோகம் ஏற்பட்டு அதனால் வருந்தி பல தலங்களுக்கும் சென்றான்.

    அப்போது அவன் கனவிலே சித்தநாதர் தோன்றி நரையூருக்கு வா என்று அழைக்க அதன்படி இவ்வாலயத்திற்கு வந்த மன்னன் 1008 குடம் பால் அபிஷேகம் செய்விக்க அவனது குஷ்டரோகம் உடனே குணமானது.

    இத்தலத்தில் சைவ வைணவ பேதம் எதுவும் கிடை யாது. மேதாவி மகரிஷி என்கிற ஒரு மகரிஷி கடுந்தவம் புரிந்து இந்த ஆலயத்திலே மகாலட்சுமியை மகளாக அடைந்தார்.

    நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிற தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு லட்சுமியை கன்னிகாதானம் செய்து கொடுத்த அற்புத சக்தி வாய்ந்த தலமாகும் இது.

    பொதுவாக மகாலட்சுமியை தரிசிக்க வேண்டுமெனில் அவளை மகாவிஷ்ணுவுடன் மணக்கோலத்தில் தரிசிப்பது வழக்கம்.

    இவ்வாலயத்தில் மகாலட்சுமி மகரிஷியின் மகளாக தோன்றி வளர்ந்து கன்னியாக உலா வந்திருக்கிறாள்.

    அவளை ஸ்ரீபர மேஸ்வரனும், பார்வதியும் மகளாகப் பாவித்து மகாவிஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்திருக்கின்றனர்.

    இவ்வாலயத்தின் தனிச் சிறப்பு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் மகா லட்சுமிக்கு 1008 தாமரை மலர்களினாலே குபேர மகாலட்சுமி ஹோமம் செய்து வருவதாகும்.

    இவ்வாலயத்திற்கு வருபவர் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெற்றியை தந்தருள்பவள் ஸ்ரீசவுந்தரநாயகி (அழகம்மை).

    இங்கு சுயவரதம், அட்சய மாலை, தாமரைப்பூ, இலைகளை நான்கு திருக்கைகளில் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள் தேவி.

    இங்குள்ள சண்முகருக்கு பிரதி செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது.

    ஆறுவித புஷ்பங்கள், நெய்வேத்தியங்கள், பலவகைப் பழங்கள், பழரசங்கள், இவைகளைக் கொண்டு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

    • அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.
    • திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர்.

    ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பவுர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பவுர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும்.

    செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும்.

    அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

    திங்கட்கிழமைகளில் வரும் பவுர்ணமியன்று அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும்.

    இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும்.

    கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.

    புதன்கிழமைகளில் வரும் பவுர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும்.

    அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும்.

    ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

    வியாழக்கிழமைகளில் வரும் பவுர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண் டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும்.

    வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும்.

    சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும்.

    திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர்.

    பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

    சனிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி தினத் தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும்.

    நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும்.

    நோயில்லா வாழ்வு கிட்டும். பவுர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

    • இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.
    • அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பழமலை நாதர் எழுந்தருளியுள்ள விருத்த கிரீஸ்வரரைப் பவுர்ணமி நாளில் வலம் வந்தால் மீண்டும் பிறவா நிலையை அடையலாம்.

    இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.

    இங்கிருந்த மலை மறைந்தாலும் இப்புண்ணிய தலத்தைப் பழமலை என்றும் விருத்த கிரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறது.

    தற்காலத்தில் இந்தத் தலத்தில் உள்ளவர்களும் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களும் முழுமதி நாளில் பழமலை திருக்கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள்.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் விலகி புண்ணியம் கிட்டும்.

    கிரிப்பிரதட்சனம் செய்பவர்களின் காலில் பட்ட தூசி பறந்து சென்று விழும் இடம் கைலாசமாக மாறி விடும்.

    அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பவுர்ணமி ஞாயிறன்று கிரிவலம் செய்தால் சிவபதம் அடையலாம்.

    திங்கள்கிழமையும் பவுர்ணமியும் கூடிய நாளில் கிரிவலம் வந்தால் ஏழு உலகங்களுக்கும் அதிபதியாகலாம்.

    செவ்வாய் பவுர்ணமியில் கிரிப்பிரதட்சணம் செய்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

    முழு நிலவு பிரகாசிக்கும் புதன் அன்று சிவன் குடிகொண்டிருக்கும் மலையை வலம் வந்தால் தேவர்களாகலாம்.

    பவுர்ணமி வியாழக்கிழமையில் கிரி பிரதட்சனம் செய்தால் முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் பவுர்ணமி வரும்போது மலைவலம் செய்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

    முழுமதி சனியன்று கிரிவலம் வந்தால் நவக்கிரகங்களின் நற்பயனைப் பெறலாம்.

    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

    நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.

     கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி.
    • 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 22-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    இதனையடுத்து 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. காலையில் வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனத் திற்கு மலையேறி சென்றனர். இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    • பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்.
    • இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    24-ந்தேதி பங்குனி மாத பவுர்ணமி அன்று விடுமுறை நாளாக இருப்பதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்த உள்ளனர். வருகிற 25-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

    மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர்.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், கோண்டூர் பெரிய மாரியம்மன், மாளிகம்பட்டு முத்து மாரியம்மன், வானமா தேவி முத்துமாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை அம்மன், பெரிய கங்கணாங்குப்பம் ஏழு கரக மாரியம்மன், குச்சி பாளையம் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி சாமி கும்பிட்டு சென்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பவுர்ணமியை யொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

     நாளை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.35 மணிக்கு வனத்துறையினர். சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்து டன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாக னங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    • முருகர் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழா.
    • அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்தநாள். தமிழர்கள் இந்த நன்னாளை தைப்பூச விழாவாக கொண்டாடுகிறார்கள். இது, ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கேரளாவில் இந்த விழா `தைப்பூசம்' என்று அழைக்கப்படுகிறது.

    சூரபத்மனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தனது தாயார் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுவதாக பெரும்பாலான வரலாற்று பதிவுகள் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

    தமிழகத்தில் பழங்காலம் முதலே முருகன், சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவார பதிகங்களில் குறிப்புகள் உள்ளன. திருஞானசம்பந்தர் தனது பாடலில் தைப்பூசம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோவில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன.

    தைப்பூச தினமான இன்று அதிகாலையில் பக்தர்கள் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானை வேண்டி வழிபடுவார்கள். முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றும், பால்குடம் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

     அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் தைப்பூச விழா இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள்.

    அவர்கள் பலநாட்கள் விரதமிருந்து மயில் காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி, பால் காவடி, பறவைக்காவடி என பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வருகிறார்கள். பலர் அலகு குத்தி வருகிறார்கள். காவடி எடுப்பவர்கள் வழிநெடுக பாடி வரும் பாடல்கள் காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது.

    கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளியானார். இதையொட்டி கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், திருக்கல்யாணமும் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது.

    தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழர்கள் தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

     மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில், இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுண்ணாம்பு பாறைகளாலான புகழ்பெற்ற இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 272 படிகள் உள்ளன. இந்த மலையையொட்டி சுங்கை பத்து என்ற ஆறு ஓடுகிறது.

    இங்கு நடைபெறும் தைப்பூச விழா உலகப்புகழ் பெற்றது. தைப்பூசத்தின் போது மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் பத்துமலைக்கு ஊர்வலமாக நடந்து வருவார்கள். ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நோத்திக்கடன் செலுத்துவார்கள்.

     மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் அருகே உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் தைப்பூச விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

    இதேபோல் குனோங் சீரோ என்ற இடத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் தைப்பூச விழாவில் ஏராளமான சீனர்களும் கலந்து கொள்கிறார்கள்.

     இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

    சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தைப்பூச விழாவை மிகவும் எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் எழுந்தருளி லயன் சித்தி விநாயகர் கோவில் வரை பவனி சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். பக்தர்கள் தேரை இழுத்துச்செல்வார்கள். அப்போது பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியபடியும் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சீனர்கள் கூட முருகப்பெருமானை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

     மொரீஷியசில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

    தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணியர் கோவிலில் தமிழர்கள் காவடி எடுத்து தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள். கேப்டவுன் நகரிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

    இதேபோல் பிஜி தீவில் வசிக்கும் தமிழர்கள் நாடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள்.

     ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகமும், தேரோட்டமும் நடைபெறும். பக்தர்கள் பால் குடம் எடுப்பார்கள். அன்னதானமும் வழங்கப்படும்.

    • தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாள்.
    • ஏதாவது சிவன் கோவிலில் பிராகார வலம் வருவது கிரிவலத்துக்குச் சமம்.

    இன்று தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாள். கிரிவலம் வருவதற்கு மட்டுமல்ல, ஏதாவது ஒரு சிவன் கோவிலிலாவது பிராகார வலம் வருவது கிரிவலத்துக்குச் சமம். அது தவிர, பூச நட்சத்திரமும் குரு வாரமும் இணைந்து வருவதால் எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" வள்ளலார். "அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி" என்று பாடிய வள்ளலார்.

    இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன. சிறு வள்ளலார் கோவில்கள் இயங்குகின்றன. அத்தனைக் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அன்னதானம் நடத்தப்படும்.

    வள்ளலாரின் மிகப்பெரிய தத்துவம்

    1.ஜீவகாண்ய ஒழுக்கம்.

    2.தனி மனித ஒழுக்கம்

    3.உயிர்கள் இடத்தில் அன்பு.

    4.செய்யவேண்டிய தொண்டில் மிகச்சிறந்த தொண்டு மனித குலத்தின் பசியைப் போக்குதல்.

    புத்தரைப் போலவே ஒருவனுக்கு பசி இருக்கும் வரை அவனிடத்திலே எந்த ஆன்மிக எண்ணமும் எழுவதற்கு வழி இல்லை என்று கண்டவர் வள்ளலார். எல்லா பிணிகளுக்கும் மூல காரணம் பசிப்பிணி தான் என்பதை எடுத்துச் சொன்ன வள்ளலார் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜனவரி மாதம் தைப்பூசத் திருநாளில் தான் சத்திய ஞான சபையைத் தொடங்கினார். ஏழு திரைகளை விளக்கி ஜோதி தரிசனத்தை காட்டும் உன்னத விழாவான தைப்பூச திருவிழா வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

    • அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
    • காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர் ணமி தினங்களை யொட்டி தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்களும் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்ததின் காரணமாக பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதோடு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது மட்டும் கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.

    இதில் மார்கழி 1-ந்தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மழை காரணமாக அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

    வருகிற 23-ந்தேதி தை மாத பிரதோஷ விழா நடைபெற உள்ளது. எனவே அன்று மாலையில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    25-ந்தேதி தை மாத பவுர்ணமி தினத்துடன், அன்றைய தினம் தைப்பூசம் என்பதால் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 26-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது.

    தைப் பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    அதோடு பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு 9445014452, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்றுவர ஏதுவாக சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 20 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் 26-ந் தேதி (இன்று) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in, மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலி(ஆப்), ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு 9445014452, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×