search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Arunachaleswarar Temple"

    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

    நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.

     கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
    • அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.

    கிரிவலத்தையொட்டி தமிழகம் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோவில், இடுக்குப் பிள்ளையார் கோவில்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.

    தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.


    எனவே, அருணாசலேஸ்வரர் கோவில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    தொடர்ந்து இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, தைப்பூச நட்சத்திரம் இன்று காலை 9.14 மணிக்கு தொடங்கியது.

    எனவே, கிரிவலப் பாதை யில் உள்ள ஈசான்ய குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நடந்தது.

    இதைத் தொடர்ந்து, தவில், நாதஸ்வரம் இசை முழங்க ஈசான்ய குளக்கரையில் அண்ணாமலையார் எழுந்தருளினார். வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

    • திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலம்.
    • நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆகம விதிகளின்படி தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திரம் நேற்று வந்தது.

    அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

     விழாவை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து நேற்று காலை யாக பூஜை நடந்தது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் பிரகாரத்திற்குள் ஊர்வலமாக கொண்டு சென்று அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை சுமார் 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.

    • சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம்.
    • உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவண்ணாமலை:

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 6.18 மணியளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பினர்.

    இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடக்கும். விழாவின் நிறைவு நாளான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (புதன்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்க பட்டிருந்தது. அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கோவிலுக்குள் சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.

    கடந்த 4-ந் தேதி பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாசினம் செய்தனர். அன்று இரவு கோவில் கொடிமரம் முன்பு அருணாச லேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நலங்கு உற்சவம், திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. அதைதொடர்ந்து நேற்று விழா நிறைவாக மதியம் சுமார் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கரத்தில் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் திருக்கல்யாணத்தின் போது வைக்கப்பட்ட முளைத்த நவதானியங்களை குளக்கரையில் உள்ள தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர்.

    பின்னர் தாமரை குளம் ராஜா மண்டபத்தில் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் அங்கிருந்து கோவிலுக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது.

    தொடர்ந்து குமரக்கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்
    • 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் சாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் கோவில் வளா கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தை போலீஸ் டி.ஐ.ஜி. சத்ய பிரியா ஆய்வு செய்து விட்டு வந்தவாசியில் உள்ள சத்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோலுக்கு வந்தார்.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. சத்ய பிரியா (பொறுப்பு) சாமி தரிசனம் செய்து கோவிலை சுற்றி வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை தீபத்திற்கு கடந்த முறை 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபத்திற்கு சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் வெயில் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வருண யாகம் போன்ற பூஜைகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.

    மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தத்தில் வருண யாகம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி யாக தண்ணீரை பிரம்ம தீர்த்தத்தில் தெளித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.

    பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.

    பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.


    அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை கோவிலுக்குள் வந்த பக்தர்கள் பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். கிளி கோபுரம் உட்புறம், மூலவர், அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர்.

    புரவி மண்டபத்தில் இருந்து கிளி கோபுரம் வரை இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் பரணி தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அர்த்த நாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் பருவத ராஜகுல சமுதாயத்தினர் மகா தீபம் ஏற்றுவார்கள்.

    அப்போது கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    மகா தீபம் ஏற்றப்படும் போது கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோ‌ஷம் முழங்குவர். பவுர்ணமி நேற்று 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று மதியம் 12 மணியளவில் பவுர்ணமி முடிந்தாலும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இருந்தாலும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளிக்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.

    கிரிவலப்பாதை கோவிலுக்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் யாரும் மின் விளக்குகளை போட மாட்டார்கள். மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே, அனைவரும் மின்விளக்குகளை போடுவார்கள்.

    அப்போது திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும். கோவிலில் நடக்கும் வாண வேடிக்கை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். பரணி தீபத்தை போலவே மகா தீப தரிசனமும், மெகா திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

    தீபத்தை காணவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் அன்றைய தினம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபத்திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மகாதீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு இன்று திருவண்ணாமலை வந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 700 போலீசார் சென்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைதம்பி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) தலைமையில் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 போலீசார் இன்று காலை வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பரணி தீபம், மகா தீபத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. செல்போனுடன் வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மேலும் கிரிவலப்பதை, கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. குட்டிவிமானங்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகின்றது.

    கிரிவலப்பாதையில் கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேலும் 5 லட்சம் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளன.

    கேமராவில் அவர்கள் நடமாட்டம் பதிவானால் கண்டுபிடித்து பிடிக்கும் வகையில் தொழில் நுட்ப வசதிகள் செய்யபட்டுள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையான வந்தவாசி திண்டிவனம் சாலை, கீழ்பென்னாத்தூர் சாலை, வேட்டவலம், ஆரணி, செங்கம், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தீபத் திருவிழாவுக்கு வரும் அனைத்து வாகனங்கள் தணிக்கை மற்றும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.  #KarthigaiDeepam #ArunachaleswararTemple

    ×