search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழமலை"

    • இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.
    • அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பழமலை நாதர் எழுந்தருளியுள்ள விருத்த கிரீஸ்வரரைப் பவுர்ணமி நாளில் வலம் வந்தால் மீண்டும் பிறவா நிலையை அடையலாம்.

    இமயமலைக்கு முன்பே தோன்றிய மலை இது. இதனால் பழைய மலை என்ற சொல் மருவி பழமலை எனப்பட்டது.

    இங்கிருந்த மலை மறைந்தாலும் இப்புண்ணிய தலத்தைப் பழமலை என்றும் விருத்த கிரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறது.

    தற்காலத்தில் இந்தத் தலத்தில் உள்ளவர்களும் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களும் முழுமதி நாளில் பழமலை திருக்கோவிலை மூன்று முறை வலம் வருகிறார்கள்.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் விலகி புண்ணியம் கிட்டும்.

    கிரிப்பிரதட்சனம் செய்பவர்களின் காலில் பட்ட தூசி பறந்து சென்று விழும் இடம் கைலாசமாக மாறி விடும்.

    அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.அதே தூசி வேறொரு மனிதர் மேல் பட்டால் அவர் மீண்டும் பிறவா வரத்தை அடைவார்.

    பவுர்ணமி ஞாயிறன்று கிரிவலம் செய்தால் சிவபதம் அடையலாம்.

    திங்கள்கிழமையும் பவுர்ணமியும் கூடிய நாளில் கிரிவலம் வந்தால் ஏழு உலகங்களுக்கும் அதிபதியாகலாம்.

    செவ்வாய் பவுர்ணமியில் கிரிப்பிரதட்சணம் செய்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

    முழு நிலவு பிரகாசிக்கும் புதன் அன்று சிவன் குடிகொண்டிருக்கும் மலையை வலம் வந்தால் தேவர்களாகலாம்.

    பவுர்ணமி வியாழக்கிழமையில் கிரி பிரதட்சனம் செய்தால் முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் பவுர்ணமி வரும்போது மலைவலம் செய்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

    முழுமதி சனியன்று கிரிவலம் வந்தால் நவக்கிரகங்களின் நற்பயனைப் பெறலாம்.

    ×