search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    • ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
    • ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 20 குறிப்புகள் வருமாறு:

    1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

    2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

    3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டு தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

    4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

    7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது.

    எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

    9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

    10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

    11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது.

    எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

    13. ஆடி மாதம் சுக்ல தசமியில் "திக் தேவதா விரதம்" இருக்க வேண்டும்.

    அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

    14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

    15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

    18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள்.

    இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.

    19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.

    அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    • இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
    • “பாக்கும்படி” நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது

    கன்னியாகுமரி, அக்.31-

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 15-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், வானவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல முற்றத்தில் வைத்து நடக்கிறது.

    இதற் கான ஏற்பா டுகளை கன்னி யாகு மரி தூய அலங்கார உபகார மாதா திருத் தல அதிபர் அருட்ப ணியாளர் உபால்டு, பங்குப்பே ரவை துணை தலைவர் செல்வ ராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள், 92 அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் பழைமை வாய்ந்தது.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

    அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.


    வருகிற 8-ந்தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

    அதன்பின் மறுநாள் 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.

    முடிவாக வருகிற 12-ந்தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா். 

    • அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள்
    • ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேட்டைக்கொரு மகனை வழிபட்டனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் புத்தூா்வயல் பகுதியை சேர்ந்த பழங்குடி விவசாயிகள் ஐப்பசி மாதத்தில் விரதம் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டு, பின்னர் அங்கு உள்ள பக்தா்களுக்கு நெற்கதிரை பிரசாதமாக வழங்குவது வழக்கம். அவற்றை வீட்டின் பூஜைஅறையில் வைத்து பாதுகாத்தால் பஞ்சம் வராது, விளைச்சல் பெருகும் என்று ஐதீகம்.

    கூடலூர் நம்பாலக் கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான புத்தரி திருவிழா தொடங்கியது. அப்போது விவசாயிகள் கடும் விரதமிருந்து வயற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அங்கு விளைந்து இருந்த முதல் நெற்பயிரை அறுவடை செய்தனர். தொடர்ந்து பாரம்பரிய இசையுடன் புனித நெற்கட்டு குவியல்கள், ஒற்றப்பாறை பகவதி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து விவசாயிகள் நெற்கதிர் கட்டுகளை நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவந்தனர். அங்கு சுவாமிக்கு படையலிட்டு அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினா்.

    கூடலூர் பழங்குடி விவசாயிகளின் புத்தரி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தது வேட்டைக்கொரு மகனை வழிபட்டு சென்றனா்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அடுத்த மாதம் 2 திருவிழாக்கள் தொங்குகிறது.
    • ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெரு மானின் அறுபடை வீடு களில் முதல் படை வீடு என பெருமை பெற்றது. இங்கு கந்த சஷ்டி விழாவும், கார்த்திகை தீபத் திருவிழா வும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு 2 திருவிழாக்களும் அடுத்த மாதத்தில் வருகின்றன.

    கந்தசஷ்டி விழா வருகிற 13-ந் தேதி காப்புகட்டு தலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு மதுரை, மதுரையை சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்க ளைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திருப்ப ரங்குன்றம் கோவிலில் தங்கி இருந்து கந்த சஷ்டி விரதம் அனுசரிப்பார்கள்.

    விழா நாளன்று சண்முகர் சன்னதியில் சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு காலை யிலும், மாலையிலும் சண்முக அர்ச்சனை நடைபெறும். தொடர்ந்து சண்முகர் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 18-ந் தேதி திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். 19-ந் தேதி காலையில் கந்த சஷ்டி தேரோட்டம் நடைபெறும். மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்ரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25-ந் தேதி பட்டாபிஷேகம் நடை பெறும். இதில் சுப்ரமணிய சுவாமிக்கு கிரீடம் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.

    இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 27-ந் தேதி தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா 13-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் 18-ந் தேதி கந்தசஷ்டி விழாவின் சூரசம்காரம் லீலை நடைபெறுகிறது. அன்றைய தினம் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடைதிறப்பு நேரம் மாற்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு நடை சாத்தப்படு கிறது.

    இதுகுறித்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இன்றைய தினம் நள்ளிரவு 1.05 முதல் 2.23 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பரங்குன்றம் கோவில் நடையானது இரவு 7 மணிக்கே சாத்தப்படுகிறது. மீண்டும் வழக்கம்போல் நாளை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கலை திருவிழா
    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை சட்டத்து றை அமைச்சர் ரகுபதி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது , தமிழ்நா டு முதல்-அமைச்சர் மா ணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் கலை திருவிழா விளையாட்டுகள் உள்ளிட்டவைகளிலும் மாணவ, மாணவிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 6 முதல் 12 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் 6 முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவி ழா நடத்தப்படுகிறது. கலைத் திருவிழா 2022-2023 -ம் கல்வியாண்டில் மாநில அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகளில் 61 மாணவ,மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தனர். ஒரு கலையரசி பட்டத்தை விராலிமலை செரளப்பட்டி பள்ளி மாணவி ராஜஹரிணி பெற்றார். மேலும் நிகழாண்டில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வட்டார அளவில் 26,767 மாணவர்கள் பங்குபெற்று மாவட்ட அளவில் 6,721 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியுடன் சேர்ந்து கலைகளிலும் தங்களது திறமைகளை காண்பித்து மாநில அளவி லான கலைத்திரு விழாவில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மா வட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி கலைத் திருவிழாவிற்காக கற்பக விநாயகா அறக்கட்டளை சார்பில் ரூ .1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் வழங்கினார். முன்னதாக இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அழகாபுரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை எம். எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, தமிழ்செல்வன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணை தலைவர் லியாகத் அலி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தாசில்தார் கவியரசன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
    • சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் 23-ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைள் நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும்.

    அதனை தொடர்ந்து தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.

    தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் ,.அலுவலர் அசோக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலுள்ள வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் வைபவம் நடைபெற்றது
    • வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்

    அரியலூர்,

    அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலில், அம்பு தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமீன்தார் துரை மழவராயர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மழவராயர் வம்சவழியினர் சேரர்மன்னர்கள் மற்றும் மழவராயர்களின் சின்னமான விற்கொடி ஏற்றினார். பின்னர் அவர்கள் வில் அம்புக்கு பூஜை செய்து, அதை வன்னி மரத்தின் மீதும், வாழை மரத்தின் மீதும் தொடுத்தனர். பின்னர் அவர்கள், அந்த வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் கண்காட்சியை பார்வையிட்டார்
    • மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி புத்தகத்திருவிழா நேற்று தொடங்கியது. இது வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. நீலகிரி புத்தகத்திருவிழாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். முன்னதாக தேசிய விருதுபெற்ற கவிஞர் சீனு ராமசாமியின் புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தம் வகையில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை சார்பில் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு புத்தகம் எழுத வேண்டுமெனில் பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். அதேபோல மாணவ-மாணவிகள் எண்ணிய இலக்கை அடைய வேண்டுமெனில் தொடர்மு யற்சிகளை மேற்கொண்டு போராடி முன்னேற வேண்டும். ஒரு நல்ல புத்தகம் மனிதனின் வழிகாட்டியாக அமையும். எனவே வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

    நீலகிரி புத்தகத்திருவிழா வில் சமூகநலன், தோட்டக் கலை, ஆதிதிராவிடர்-பழங்குடியினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

    மேலும் நீலகிரி புத்தகத்திருவிழாவில் தினமும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநி கழ்ச்சி, இலக்கிய சொற்பொ ழிவு நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே புத்தக திருவிழா வெற்றி பெற அனைவரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், மாவட்ட வனஅதிகாரி கவுதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்க உறுப்பி னர் அருண்மாதவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், நகர்மன்ற தலை வர்கள் வாணீஸ்வரி (ஊட்டி), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (ஊட்டி), கீர்த்தனா (கூடலூர்), ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவணகுமார், வட்ட வழங்கல் அதிகாரி மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.

    இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.

    இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.

    • உத்தப்புரத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கோரி வழக்கு டி.எஸ்.பி. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உத்தப் புரத்தை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் வருகிற 24 முதல் 26-ந்தேதி வரை திருவிழா நடத்த திட்டமிட்டு, விழாக் குழு தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற் பட்ட பிரச்சினை காரண மாக இந்தகோவிலில் திரு விழா நடைபெறவில்லை.

    மேலும் மற்றொரு சமூ கத்தை சேர்ந்த நபர்கள் சிலர், கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு, கோவிலில் திருவிழா நடக்க விடாமல் செய்தனர். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சம ரசம் செய்யப்பட்டது.

    சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு அக் டோபர் 24 முதல் 26-ந்தேதி வரை முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி கோரி உயர் அதிகாரிக ளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உத்தப்பு ரம் முத்தாலம்மன் கோவி லில் திருவிழா நடந்த அனு மதி அளித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப் போது வழக்கு குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி. பதி லளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
    • பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியாக

    மேற்கு வங்கத்தில் காளிபூஜை கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும்,

    அவரவர் பிறந்த வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.

    தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்பு வகைகளையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்கின்றனர்.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால்,

    பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    இதனால் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாகும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.

    ×