

அரியலூர்,
அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலில், அம்பு தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமீன்தார் துரை மழவராயர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மழவராயர் வம்சவழியினர் சேரர்மன்னர்கள் மற்றும் மழவராயர்களின் சின்னமான விற்கொடி ஏற்றினார். பின்னர் அவர்கள் வில் அம்புக்கு பூஜை செய்து, அதை வன்னி மரத்தின் மீதும், வாழை மரத்தின் மீதும் தொடுத்தனர். பின்னர் அவர்கள், அந்த வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.