search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் தெப்ப திருவிழா
    X

    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.

    கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் தெப்ப திருவிழா

    • நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
    • சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் 23-ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைள் நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும்.

    அதனை தொடர்ந்து தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.

    தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் ,.அலுவலர் அசோக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×