search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festivel"

    • அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலுள்ள வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் வைபவம் நடைபெற்றது
    • வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்

    அரியலூர்,

    அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோயிலில், அம்பு தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமீன்தார் துரை மழவராயர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மழவராயர் வம்சவழியினர் சேரர்மன்னர்கள் மற்றும் மழவராயர்களின் சின்னமான விற்கொடி ஏற்றினார். பின்னர் அவர்கள் வில் அம்புக்கு பூஜை செய்து, அதை வன்னி மரத்தின் மீதும், வாழை மரத்தின் மீதும் தொடுத்தனர். பின்னர் அவர்கள், அந்த வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து அம்மரத்து இலைகளை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    • முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது.
    • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    திருப்பூர்:

    கடந்த ஓராண்டாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு விலை சீராக இல்லாத நிலையில் வியாபாரிகள் இருப்பு வைத்து பஞ்சு விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது.இருப்பினும் விலை குறைவாக இருக்கும் போது பஞ்சை வாங்கி இருப்பு வைத்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது. உற்பத்தியை சீராக செய்ய முடியாமல், உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, நூல் விலை காரணமின்றி உயர்வதால், தீபாவளி பண்டிகை ஆர்டர் கையை கடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது.

    அக்டோபர் 1 முதல் 2023-24ம் பருத்தி ஆண்டு துவங்கியுள்ளது. விரைவில் இந்திய பருத்தி கழகம் ஆலோசனை செய்து நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட உள்ளனர்.வழக்கமாக பருத்தி சீசனில் வரத்து அதிகரித்து விலை சீராக இருக்கும். இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையிலும் ஏற்றம் இருக்காது என, உற்பத்தியாளர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களாக, 15 நாட்கள் இடைவெளியில் நூல் விலை உயர்ந்தது. தற்போது நூல் விலையில் மாற்றம் இல்லையென, முன்னணி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையில் உயர்வு இருக்காது என்று பின்னலாடை உற்பத்தியாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதனால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • கோவில்பாளையத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் சக்தி சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நல்ல சேவகர் அய்யனார், செம்மலயபர், ஆகாச கருப்பு, கருப்புசாமி, மதுரை வீரன், காரடையான் சங்கிலி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை , அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் துங்கபுரம், புது வேட்டக்குடி, காரைப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி கருப்பையா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் திராளக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பாலம் அருகேயுள்ள ஸ்ரீகருப்பையா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி பக்தர்கள் புனித நீர் எடுத்துவரப்பட்டு,அன்று மாலை யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு புதன்கிழமை காலை 9.10 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 9.30 மணியளவில் கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்திலுள்ள விநாயகர், இடையர் கருப்பு, மருதையன், சின்னையா, ஒண்டி புலிகருப்பு, நல்லமுத்தாயி, பொம்மியாயி, வண்டு தின்னாயி, பாப்பாத்தி அம்மாள், ஓம் சக்தி, பச்சையம்மாள், குதிரை தோரணவாயில் ராகு, கேது ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் திராளக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா நடைபெற்றது
    • பால்குடம் எடுத்தும், தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மண்டக படித்தார்களால், ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால்குடம் எடுத்தும், தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை, பூத்தட்டு, முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வருடம் தோறும் மண்டக படித்தார்களா திருவிழா  கொண்டாடப்படுவது வழக்கம். .அதேபோல் இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பால்குடம் எடுத்தும் தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை பூத்தட்டு மற்றும் முளைப்பாரி எடுத்தல் அது விமர்சையாக நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் அம்பாள் திருவீதி உலா அதிர்வேட்டு முழங்க மேலதாளங்களுடன் நடைபெற்றது..விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.


    • புதுக்கோட்டை ஆலங்குடி அதிசய அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசய அன்னை ஆலய திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஆலங்குடி பங்கு தந்தை ஆர்.கே. சாமி அடிகளார் கொடியேற்றி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான தேர்ப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஆலங்குடி, கும்மங்குளம், அரசடிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,மாதாவின் புகழ் பாடியபடி தேர்பவனியில் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    • மாலை 6 மணிக்கு கண்காட்சியை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைக்கிறார்.
    • புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து "மன்னார்குடி 3-வது புத்தக திருவிழா- 2023" நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 10 நாட்கள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய இருக்கிறார்கள்.

    மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 15 சதவீதமும், பொதுமக்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி விலையில் நூல்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு ரூ.70 லட்சம் விலையுள்ள நூல்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள புத்தக திருவிழா பேரணியை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைக்கிறார்.

    மாலை 6 மணிக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் கலந்து கொண்டு உரை ஆற்றுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட நூலக அலுவலர் முருகன், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி புனித வளனார் பெண்கள் மேல்நிலை பள்ளி, சவளக்காரன் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகிய அணிகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நூல்கள் வாங்கலாம் என விழாக்குழு சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

    • மழை வேண்டி, விவசாயம் செழிக்க வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    பொன்னமராவதி,

    வேந்தன்பட்டியில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நல்லாண்டி ஐயனார் பள்ளத்து அய்யனார் ஆகிய இரு வேறு திசைகளளில் உள்ள அய்யனார் கோயில்களில் ஓரே நாளில் நடைபெற்ற ஆடி புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆடி முதல் தேதியன்று குதிரைகள், காளைகள், நாய் உள்ளிட்ட புரவிகள் செய்ய பிடிமண் கொடுக்கப்பட்டு ஊரில் குதிரை பொட்டல் என்னும் இடத்தில் ண்ணை வைத்து புரவிகள் செய்யப்பட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவுக்கு தயார் செய்யப்பட்டு நிலையில் இரு திசைகளில் உள்ள அய்யனார் கோயியிலுக்கு எடுத்து செல்ல சிலைகள் அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து கிழக்கு திசையில் 2கிலோமீட்டர் தொலைவில் ஊர் எல்லையில் உள்ள பள்ளத்து அய்யனார் கோயிலுக்கு புரவிகளை பக்தர்களும், பொதுமக்களும் தோலில் தூக்கிக்கொண்டு ஊரின் எல்லைக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கிருந்து வேந்தன்பட்டிக்கு வந்து மீண்டும் அதே போன்று குதிரை பொட்டலில் இருந்து வைக்கப்பட்டிருந்த வேறு புரவிகளை அங்கிருந்து மேற்கு திசையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஊர் எல்லையில் உள்ள நல்லாண்டி அய்யனார் கோயிலுக்கு எடுத்துச்சென்று வைத்து வழிபட்டனர் இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.ஆண்டுதோறும் இவ்வாறு வழிபடுவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகமாக கொண்டு பல தலைமுறைகளாக இவ்வாறான வழிமுறை இன்றும் நடைபெற்றுவருகிறது. பாதுகாப்பு பபணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அம்மாபாளையத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டுப்பெரு விழா சப்பர பவனி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டு பெரு விழா சப்பர பவனி நேற்றுநடந்தது.அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டு பெரு விழாவையொட்டி நேற்று காலை 8மணியளவில் திருவிழா சப்பர பவனி நடந்தது. பாளையம் புனித சூசையப்பர் தேவாலயப் பங்கு குரு ஜெயராஜ் ஜெபம்செய்து சப்பரத்தை மந்திரித்த பிறகு, அம்மாபாளையம் ஊராட்சி தலைவர் பிச்சைபிள்ளை, பாளையம் பங்குகுரு ஜெயராஜ்ஆகியோர் சப்பர பவனியை கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த சப்பர பவனி அம்மாபாளையம் கிராமத்தின் முக்கியவீதிகளில் பவனியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பங்கு குருஜெயராஜ் தலைமையில் சிறப்புப் பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆராதனையும், அன்னதானமும் நடந்தது.இதில் பாளையம், அம்மாபாளையம், குரும்பலூர், பெரம்பலூர், புதுநடுவலூர், சத்திர மனை, ரெங்கநாதபுரம் உள்ளிட்டப்பல்வேறு கிராமங்களை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் எழமூர் கிராமம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள எழமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 5-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்தனர். விழாவில் எழமூர், ஓலைப்பாடி, வயலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஓலைப்பாடி கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • ஏழு நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது

    அகரம்சீகூர் , 

    பெரம்பலூர் மாட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஓலைப்பாடி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்,பக்கத்தர்கள் தீமிதித்தனர்.இவ்விழாவையொட்டி கடந்த 5-ம் தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .தொடர்ந்து நேற்று தீ மிதி திருவிழா நடைப்பெற்றது.இவ்விழாவில் ஓலைப்பாடி, வயலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டணர். இவ்விழாவை வகையற காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.குன்னம் போலிஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புபணியில்யிடுப்பட்டனர்.

    ×