search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சக்தி அழைத்தல் நிகழ்ச்சி
    X

    சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

    • பூலாம்பாடி ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
    • 23-ந் தேதி வருடாபிஷேகம் நடைபெறுகிறது

    அரும்பாவூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி தேதி நடைபெற உள்ளது.அதனை யொட்டி கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளும் பாரதம் படிக்கும் நிகழ்வும் நடைப்பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பச்சமலை அடிவாரம் வாவடி ஆற்றங்கரையில் ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர்.வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்து வரவேற்று வழிபட்டனர்.அதனைத்தொடர்ந்து கோவிலில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.வரும் 21-ந்தேதி காலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. 22-ந்தேதி நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.அன்றிரவு விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்துவருகின்றனர்.

    பூலாம்பாடி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருடாபிஷேக திருவிழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவி ன் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேகம் வரும் 23-ந்தேதி நடைபெறஉள்ளது.அன்றுகாலை அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்,பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4-மணிக்கு மேல் நல்லதண்ணி குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டு வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந்தேதி மாலை பொங்கல் மாவிலக்கு பூஜையும்,இரவு வானவேடிக்கையுடன் ஏழு வாகனங்களில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெறும்போது,ஒயில் கும்மி மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது என விழாக்ழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பூலாம்பாடி மண்ணின் மைந்தன் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

    Next Story
    ×