search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி திருவிழா
    X

    மீன்பிடி திருவிழா

    • 4 கிராம மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்
    • கட்லா, விரால், ஜிலேபி வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் மதியாணி, தேனூர்,ரெட்டியபட்டி, கண்டியா நத்தம் புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.நெல் அறுவடைக்கு பின்னர் ஊர் விவசாய பாசன கன்மாய்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும்.அப்போது ஊர் முக்கியஸ்தர்களால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீன்பிடித் திருவிழா நடைபெறும். இவ்வாறு நடைபெறும் மீன்பிடித் திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்ட பின்னர் கிராம மக்கள் கம்மைகளில் துள்ளி குதித்து தங்கள் கையில் வைத்திருந்த மீன்பிடி உபகரணமான கூடை ,வலை போன்றவற்றை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.இதில் நாட்டு வகை மீன்களான 5 கிலோ எடை கொண்ட கட்லா மீனும் , 3 கிலோ எடை கொண்ட விரால் வகை மீன்களும் ஜிலேபி கெண்டை அயிரை மீன்கள் கிடைத்தன இதனை மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர்.பொன்னமராவதி அருகில் உள்ள உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் இன்று இரவு நடைபெறுவதால் காப்பு கட்டப்பட்ட 15 தினங்களுக்கு எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறாது. அவ்வாறு நடைபெறும் சுப தினங்கள் 15 தினங்களுக்குப் பின்னர் தான் நடைபெறும் ஆகையால் இன்று பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் நான்கு கிராமங்களில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

    Next Story
    ×