search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா
    X

    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா

    • நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • விழாக்காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகுகலியுகவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொருஆண்டும் 10 நாட்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம்.இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) ராமநவமி அன்று கொடிஏற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வரும் 7-ந் தேதியும், 8-ந் தேதி ஏகாந்தசேவையும் மிகசிறப்பாக நடைபெறும். திருவிழா காலங்களில் தினசரி நாதசுர இசை, திருமஞ்சனம், கிளாரினட், பொய்க்கால் குதிரைஆட்டம், நாட்டியம், வேதபாரண்யம், பஜனைகள், கிராமியகலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர்பந்தல், அன்னதானம், தங்கும் வசதி, குடிநீர்வசதி, மருத்துவவசதிகள் அமைத்து தரப்படுகிறது. அரசுபோக்குவரத்துகழகம் சார்பில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டகுடி, ஆகிய பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்பு பஸ் இயக்கப்படவுள்ளது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டகலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படும். அரியலூர் மாவட்டபோலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    Next Story
    ×