என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Event"

    • இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • அரசு பள்ளியில் படிப்பதே பெருமை என்ற நிலை முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சா் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியா் பள்ளியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இருப்பினும், மாண வா்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதன்மூலம் ஏராள மானோா் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அதன் தொடா்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா ஓர் ஆசிரியா் பள்ளியை ஈராசிரியா் பள்ளியாக தரம் உயா்த்தினார்.

    அவரது வழியில் செயல்பட்ட கருணாநிதி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

    அதேபோல் மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தினை ஏற்படுத்தி உள்ளார்.

    மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பஸ் பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகிறது.

    அதன்படி, அவா்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    தற்போது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் படிப்பதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தை களைந்து அரசுப்பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.

    பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த ப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனா். இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வாி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியா் கழகத்தலைவா் சக்கரவா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே வெங்கரையில் பழமைவாய்ந்த வெங்கரையம்மன் கோவிலில் பூச்சூட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது
    • பேச்சு வார்த்தைக்கு 7 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே வெங்கரையில் பழமைவாய்ந்த வெங்கரை யம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் திருவிழாவிற்கான ஏற்பாடு களை வெங்கரையம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வந்தனர். இதற்கிடையே திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து தாசில்தார் சிவகுமார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் இதில் சமரச உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. பிரச்சினை காரணமாக காப்பு கட்டும் விழா இந்து சமயஅறநிலையத் துறையினரால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    அந்த நோட்டீசில் திருவிழா தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. இதனால் தற்போது திருவிழா நடந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இந்த ஆண்டு தற்காலிகமாக திருவிழா நடத்தப்படுவது ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் நேற்று இரு தரப்பினரையும் திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து வெங்கரை பகுதியைச் சேர்ந்த 3 நபர்களும், பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 நபர்களும், மத்தியஸ்தராக ஒரு நபரும் மொத்தம் 7 பேர் கொண்ட கமிட்டியை நியமித்து திருவிழா நடத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்று அதிகாலை வெங்கரை அம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இருப்பினும் வெங்கரை பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நவராத்திரி விழாவை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பலமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ராஜ ராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயிலில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபோகத்தின் துவக்கமாக ஊர் அம்பலகாரர் ராஜா தலைமையில் பக்தர்களால் சிர்வரிசை எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் சரவணன் மற்றும் ஹரி ஆகியோர் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் புடை சூழ மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று சென்றனர். வைபோகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    • நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு குன்னமலை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமை தாங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் குன்னமலை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குன்னமலை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி பகுதிகளை சேர்ந்த வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது.பொதுமக்கள் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என் குப்பை என் பொறுப்பு. என் கிராமம் தூய்மை கிராமம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    அதை தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு குறித்தவிழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், துணைத் தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலர் பரிமளம், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    • குமாரபாளையம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தலைமை ஆசிரியர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மேலும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்பு ணர்வு பிரச்சார நிகழ்ச்சி தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, சிவகாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி. மகாலட்சுமி பங்கேற்று மாணவ, மாணவி யர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

    மேலும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். இதில் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம், யாரையும் அடிமையாக விட மாட்டோம், என்பது உள்ளிட்ட வாசகங்களை கூறினார்கள். இதை யடுத்து ராஜம் தியேட்டர் வாசலிலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. மகாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாணவ, மாணவியரிடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வந்த பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் 75-வது சுதந்திரதினத்தை நினைவு படுத்தும் விதமாக ராணுவ பீரங்கி போலவும், காந்தி, நேதாஜி, பாரதமாதா, பரதநாட்டிய கலைஞர் போல வேடமணிந்து மாணவ, மனைவியர் பங்கேற்றனர். போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    • பரமத்தி வேலூரில் ஓவ்வொரு வருடமும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
    • இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலையை கலைஞர்கள் வடிவமைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஓவ்வொரு வருடமும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி கடந்த ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள், கவுரவர்கள் போன்று அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    ஆடி 18-ம் நாளான இன்று துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலையை கலைஞர்கள் வடிவமைத்தனர். துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்தலில் தடவிய பின்னர் கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள் போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் மகாபாரத கதை பாடும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றுக்கு செல்ல காவல் துறையினர் மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடைவிதித்துள்ளதால் மகாபாரத கதைபாடும்‌‌ குழுவினர் காவிரி ஆற்றுக்கு சென்று ஆயுதங்களை சுத்தம் செய்ய முடியாத‌ நிலை ஏற்பட்டுள்ளது.

    • கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டு ‌உலக மக்கள் தொகை தினத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

    மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், ஆணும் பெண்ணும் சமம், பெண் சிசுக்கொலை தடுத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், வளர் இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கபிலர் மலை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவநேசன், பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
    • கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோவில்பட்டி:

    மகாபலிபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமை தாங்கினார். சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை மக்களிடையே எடுத்துக்கூறும் வகையில், அன்பு மித்ரா கலைக்குழுவினர் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் தேன்ராஜா, காந்திஜி கஸ்தூரிபாய் மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன், தெற்கு திட்டங்குளம் மகளிர் மன்ற தலைவி ரஞ்சிதமணி, நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் தங்கமாரியப்பன், மாரிசெல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை (லோகோ) வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோர், 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி யின் இலச்சினை (லோகோ) மாதிரி மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடந்தது
    • இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை

    கரூர்:

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகுந்த மாதம் என்று அழைக்கும் வகையில், அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் விசேஷ நிகழ்ச்சிகள் களைகட்டும். இந்த மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு என்று தமிழகம் முழுவதும் விழாக்கோலம் காணும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆடி முதல் நாளே இந்த கொண்டாட்டம் களைகட்டி விடும். அதாவது அன்றைய தினம் தேங்காய் சுடும் பண்டிகையுடன் பக்தர்கள் அம்மன் வழிபாட்டை தொடங்கி விடுவார்கள்.அதன்படி, நேற்று ஆடி மாதம் பிறந்ததையொட்டி கரூர் அமராவதி ஆற்று படிக்கட்டுதுறை பகுதியில் பொதுமக்கள் தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதற்காக அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேங்காய்களை சுடும் அழிஞ்சி குச்சி மற்றும் தேங்காய்களை வாங்கினர். அவ்வாறு வாங்கி வந்த தேங்காயை தரையில் நன்றாக உருட்டி சுத்தப்படுத்தினர். பின்னர் தேங்காயில் உள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை, எள், அவல் உள்ளிட்ட பொருட் களை உள்ளே போட்டு மூடினர். பின்னர் நெருப்பு மூட்டி அரை மணி நேரத்திற்கு மேலாக சுட்டனர். நன்றாக சுடப்பட்ட தேங்காயை உடைத்து, அமராவதி ஆற்று கரையோரத்தில் உள்ள விநாயகருக்கு படையலிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.

    அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடந்த மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டுமென்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின் போது படைக்கும் வகையில் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாகப் படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

    ×