search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி
    X

    ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி

    • ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நவராத்திரி விழாவை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பலமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ராஜ ராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயிலில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபோகத்தின் துவக்கமாக ஊர் அம்பலகாரர் ராஜா தலைமையில் பக்தர்களால் சிர்வரிசை எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் சரவணன் மற்றும் ஹரி ஆகியோர் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் புடை சூழ மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று சென்றனர். வைபோகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    Next Story
    ×