search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer festival"

    • மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
    • சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

    மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.

    தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.

    இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.
    • 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது. இதை யொட்டி பிரமாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. நிறைவு விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் புகைப்படப்போட்டி, இளை ஞர்கள் மற்றும் பெண்க ளுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டி கள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகை யில், 46-வது ஏற்காடு கோடை விழாவை சுமார் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர். ஏற்காட்டை சுற்றி பார்க்க சூழலியல் சுற்றுலா பேருந்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நாள்தோறும் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை புறப்பட்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலை, ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களையும் பார்வையிட்டு திரும்பும் வகையில் இந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஏற்காடு ஏரியில் வண்ண விளக்குகளுடன் கூடிய நீர் ஊற்று அடுத்த ஆண்டு கோடைவிழாவில் இடம் பெறும் என்றார். நிகழ்ச்சி யில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் (பொ) மாறன், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புராஜன், குணசேகரன் உட்பட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • விழாவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • கோடைவிழா நடக்கும் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை காணவும், இங்குள்ள தேயிலை தோட்டத்தின் இயற்கை அழகினை ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கோவை வால்பாறையில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.

    விழாவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இன்று தொடங்கிய கோடை விழாவானது வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கோடைவிழா நடக்கும் நுழைவு வாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெர்பரா, ரோஜா, டென்ரோபியம், புளு டெய்சி, ஏஸ்பரகஸ் பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட், வண்ணத்துப்பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளையும் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது.

    மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடை விழா சின்னமாக விளங்கும் இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகிய உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    விழாவில் பரதநாட்டியம், யோகா, கிராமிய நடனம், நையாண்டி மேளம், செண்டை மேளம், கரகாட்டம், காவடியாட்டம், காவலர்களின் நாய்கள் சாகச நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட படுகர் நடனம், கல்வி துறை சார்பில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி, வால்பாறை வியாபாரிகள் சார்பில் மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்க உள்ள கண்காட்சியில் நடைபெற உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நகராட்சி படகு இல்லத்தில் படகு சவாரியும் நடக்க உள்ளது. விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    • தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    • அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    வால்பாறை,

    வால்பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (26-ந்தேதி) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியும் இடம் பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா? மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது அந்த காலமா? இந்த காலமா? பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை அன்று பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

    விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

    இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

    • ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள வண்ண மயமான மலர்களையும், மலர்கள், காய்கறிகள் பழங்க ளால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் மலர்களால் ஆன சின்சான் பொம்மை குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இதேபோல், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    இவ்விழாவை முன்னிட்டு வரும் 28-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டி கள், விளை யாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.

    2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியும், கலைய ரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கரகம், மான், மயில், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்பில் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.

    கோடை விழாவின் 3-ம் நாளான இன்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணி களுக்கும், இளைஞர்க ளுக்கும், அரசு ஊழியர்க ளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த விழாவையொட்டி ஏற்காட்டில் தங்கும் விடுதி, ஓட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

    இதனிடையே நேற்று மதியம் ஏற்காட்டில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீரோட்டங்களில் மழைநீர் ஓடியதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.
    • அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன் பூங்கா என பல்வேறு சுற்றுலா அம்சங்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.திருமூர்த்திமலையில், சுற்றுலாவை மேம்படுத்தவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், விடுமுறை காலத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.

    அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சுற்றுலாத்துறை சார்பில் மாவட்டத்துக்கு தனியாக உதவி சுற்றுலா அலுவலர் நியமிக்கப்பட்ட பிறகு திருமூர்த்திமலையில் கோடை விழா நடத்தி வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகியுள்ளது. இந்தாண்டும் கோடை விழா குறித்த எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45- வது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ெதாடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது.   முதல் நாளான கடந்த  25-ந் தேதி (புதன்கிழமை)  அன்று கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

    கோடை விழாவின் 7-வது நாளான நேற்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

    போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

    8-வது நாளான இன்று (புதன்கிழமை) கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவடைந்தது. காலை 11 மணிக்கு  விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி,  பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக  இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
    விழா நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.   விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  

    சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   அதுபோல் மலர்கள் முன்பாக தங்கள் பெற்றோரை மழலைகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏரியில் படகு சவாரி  செய்து மகிழ்ந்ததோடு, மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். காய்கறிகளால் ஆன காட்டெருமை, விமானம்,  அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீருற்று, மலர்களால் வடிவமைக்கப்பட்ட   மேட்டூர் அணை, பெண்களுக்கான இலவச பஸ், மாட்டு வண்டி, சின்-சான் பொம்மை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல்வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

    இதில் சிறந்த கண்காட்சி அரங்கங்கள் எவை? என தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட  கலெக்டர் கார்மேகம்  சான்றிதழ்கள் வழங்கினார்.  மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த  துறை அலுவலர்களையும் பாராட்டினார்.

    விழா நிறைவு நாளான இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட சிறப்பு பஸ்கள் அதிக எண்ணிக்கையில்  விடப்பட்டன. அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஏற்காடு அடிவா ரத்திற்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    புதுவை கடற்கரையில் 4 நாள் கோடை விழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து கோடை விழாவை நடத்துகிறது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில்  2-ந் தேதி  தொடங்கி 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்கள் கோடை விழா நடக்கிறது. 

    இதன் தொடக்க விழா   மாலை 6.30 மணிக்கு கடற்கரை சாலை காந்தி திடலில் நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை தொடங்கி வைக்கிறார்.  சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் சந்திரபிரியங்கா, லட்சுமி நாராயணன், புதுவை அரசு செயலர் நெடுஞ்செழியன், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் தீபக்கெய்வட்கர், புதுவை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சிவராசன்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து முத்து குழுவினரின் மங்கள இசை, உதயம் நாட்டியாலயா, காளியம்மன் கலைக்குழு, யூனஸ் மெல்லிசைக்குழுவின் பரதநாட்டியம், காளியாட்டம், நாட்டுப்புற இசை நடக்கிறது. 

    (3-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு முதலில் பொம்மலாட்டம், பாரதியார் பல்கலைக்கூடத்தின் நாட்டுப்புற நடனம், மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்டக்குழுவின் சிலம்பாட்டம், யாழ் கிராமிய கலைக்குழுவின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம் நடக்கிறது. 

    4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதலில் வள்ளுவர் வில்லிசை குழுவின் வில்லுப்பாட்டு, சுந்தர நாட்டியேகேந்திராவின் பரதநாட்டியம், முனீஸ்வரன் கலைக்குழுவின் பம்பை உடுக்கை, ஹைடெக் சினி ஆர்கெஸ்ட்ரா மெல்லிசை நடக்கிறது.

    5-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதலில் கலைமாமணி பொன்சண்முகம் குழுவின் நாதசங்கமம், யாத்ரா கலை பண்பாட்டு சங்கத்தின் நாட்டுப்புற நடனம், சப்தகிரி கிரியேஷன்ஸ் சிவன், பார்வதி நடனம், முகில் மெல்லிசை குழுவின் மெல்லிசை ஆகியவை நடக்கிறது. 
    கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு பெடல் படகு போட்டியும், படகு ஓட்டுபவர்களுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. இந்த படகு போட்டிகளில் மொத்தம் 60 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
    கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நட்சத்திர ஏரியில் படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நட்சத்திர ஏரியில் படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கடந்த 24-ந்தேதி கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி கடந்த 29-ந்தேதியுடன் முடிவடைந்தது. கோடை விழா நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

    கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சுற்றுலா துறை சார்பில் நேற்று படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதில் சுற்றுலா பயணிகளுக்கு பெடல் படகு போட்டியும், படகு ஓட்டுபவர்களுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. இந்த படகு போட்டிகளில் மொத்தம் 60 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தலில் இரட்டையர் பெடல் படகு போட்டி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறையை சேர்ந்த ஜீவிகா-ரமேஷ் ஆகியோர் முதலிடத்தையும், திருவாரூரை சேர்ந்த செல்வி-உதயா ஆகியோர் 2-ம் இடத்தையும், திருச்சியை சேர்ந்த புவனேஸ்வரி-சந்தோஷ்குமார் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    4 பேர் கொண்ட குழு பெடல் படகு போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த ரித்திக், உதயா, சாந்தம்மாள், செல்வி குழுவினர் முதல் இடத்தையும், தென்காசியை சேர்ந்த அய்யன்கண்ணு, அபி, சஞ்சீவ்ராவ், மணிகண்டன் குழுவினர் 2-ம் இடத்தையும், மதுரையை சேர்ந்த முத்துக்குமார், முத்துராமன், யுவராஜ், சுவாதி குழுவினர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    பின்னர் படகு ஓட்டுபவர்களுக்கான துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. இதில், வனபாண்டி முதல் இடத்தையும், தாவூத் இப்ராகிம் 2-ம் இடத்தையும், பெலிக்ஸ் ராஜ்குமார் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி, படகு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் அன்பரசன், உதவி சுற்றுலா அலுவலர் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஏற்காடு கோடைவிழாவை ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொேரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்படவில்லை.  இந்த ஆண்டு கடந்த 25-ந்  தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து, விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக்க சின்-சான் பொம்மை ,வள்ளுவர் கோட்டம்  போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    சுற்றுலா பயணிகள் அமர இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டது. இதை சமாளிக்க சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனங்கள் திரும்பி செல்ல குப்பனூர் வழியாக திரும்பி விட பட்டனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லவும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    நேற்று குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 6-ம் நாளான இன்று பல்வேறு துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது.
    நீலகிரி:

    இந்த ஆண்டு கடந்த 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து கண்காட்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி கடந்த 28-ந் தேதி தொடங்கியது. 

    கண்காட்சியை குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தொடங்கி வைத்தார். பிற மாவட்டங்களில் விளையும் பழங்களை கொண்டு அரங்குகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 

    பழங்களால் ஆன பல்வேறு உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் தோட்டக்கலைத்துறை மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில், நீலகிரியில் கோலாகலமாக நடைபெற்று வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதியாக பழக்கண்காட்சியுடன் கோடை விழா நிறைவு பெற்றது. 

    கடந்த 2 நாட்களில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் பழக்கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.

    ×