search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வால்பாறை"

    • பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஆறுகளில் தண்ணீர் வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

    வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கிறது. இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில், 7 ஏக்கர் மதிப்புள்ள செடி, தேயிலை, மரங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகியது,

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் வனத்துறை ஆலோசனை
    • சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து மாதந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறை சார்பில் சமீபத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்தனர். வால்பாறையில் சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வால்பாறை எம்.எல்.ஏ. கந்தசாமி தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா முன்னிலையில், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 6 மணிக்கு மேல் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கின்றன. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் வரும் போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது. இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை பயணிகள் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தடை நேரத்தை தளர்த்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும் என்றனர்.

    • 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார்.
    • மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே முத்துகுட்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு டி.பார்ம் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு அவர் விரும்பிய பாட பிரிவு கிடைக்கவில்லை. இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மீன் வளர்ப்பு உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

    இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

    • இரவு 9 மணிக்கு சேலத்தில் பஸ் புறப்படும்.
    • இரவு 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு பஸ் இயங்கும்.

    திருப்பூர் :

    அரசு போக்குவரத்து கழக சார்பில், சேலம் - வால்பாறை இடையே பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இரவு, 9 மணிக்கு சேலத்தில் புறப்படும் பஸ், நள்ளிரவு திருப்பூர் வந்தடைத்து பின்னர் நள்ளிரவு திருப்பூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை, 4:20 மணிக்கு வால்பாறை சென்று சேருகிறது.

    தற்போது, இரவு, 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு (பொள்ளாச்சி வழி) கடைசி பஸ் இயங்கி வந்த நிலையில், இரவு, 12:15 க்கு பொள்ளாச்சி, வால்பாறைக்கான கடைசி பஸ் இந்த பஸ் இனி இயங்கும். மறுநாள் மதியம், 12:30 மணிக்கு வால்பாறையில் புறப்பட்டு, பொள்ளாச்சி, திருப்பூர் வந்து, இரவு, 7:00 மணிக்கு சேலம் செல்லும். இந்த புதிய பஸ் சேவை மூலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சாதிக் செல்போன் கடை நடத்தி வருகிறார்
    • 7 செல்போன்கள் திருட்டு போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் அஹ்மத் சாதிக் (வயது 27). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 7 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வால்பாறையை சேர்ந்த 13, 14 வயதுடைய சிறுவர்கள் என்பதும், 2 பேரும் கடையில் செல்போன்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 சிறுவர்களையும் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    • பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன.

    இவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி சாலைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இருப்பினும் அதிகளவில் வாகனங்கள் வரும்போது சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

    வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் வாக னத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு நேற்று உயிரிழந்தது. அழிந்து வரும் இந்த அரியவகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • முருகேஷ் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிபாறையை சேர்ந்தவர் ஹென்டி. இவரது மகன் முருகேஷ் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 29-ந் தேதி முருகேஷ் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது. இதனை கூலிவேலை செய்து வரும் தனது தாய் , தந்தையிடம் எப்படி கேட்பது என நினைத்தார்.

    இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தங்களது மகனை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முருகேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முருகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஜாஸ்மின் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
    • ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்துள்ளனர்.

    வால்பாறை

    கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் 3-வது டிவிசனை சேர்ந்தவர் மதுஅருமராஜ்குமார் (வயது68).

    இவர் அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் துணை மேலாளராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.

    இவரது மனைவி ஜாஸ்மின்(வயது67). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவருக்கு அங்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாஸ்மின் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த வீட்டினை காலி செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி சம்பவத்தன்று தனது கணவருடன் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியானர். உடனடியாக மனைவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதா க தெரிவித்தார். இதை கேட்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்து ள்ளனர். அது விஷம் என தெரியாமல் அவர் குடித்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.

    வால்பாறை

    வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

    • தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
    • தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

    வால்பாறை

    வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.

    • சுற்றுலா போர்வையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயல்களால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. நடுவில் வால்பாறை நகராட்சி 217 ச.கிமீட்டர் பரப்பளவில் உள்ளது. வால்பாறை நகரம் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    வால்பாறையில் நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே மாலை 6 மணிக்கு பிறகு சமவெளி பகுதிகளில் இருந்து பலரும் வால்பாறைக்கு சுற்றுலா வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலரும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாவதாகவும் தகவல் வந்தது.

    இதையடுத்து சமூக விரோத செயல்களை தடுக்கவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாகாமல் தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் வருபவர்களிடம் அறை புக் செய்துள்ளீர்களா? என்ன காரணத்திற்காக வருகிறீர்கள்? எனவும் விசாரிக்கின்றனர். மேலும் அவர்கள் வைத்திருக்கும் உடைமைகளையும் சோதனை செய்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-வால்பாறைக்கு இரவு நேரங்களில் சட்டவிரோத சுற்றுலா, சாலையோரம் மது அருந்துவது, நள்ளிரவில் போதைப்பொருள் கடத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. நேற்று கூட சுற்றுலா பயணிகள் 2 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இவற்றை நெறிப்படுத்த வேண்டும். சுற்றுலாவை முன்வைத்து நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று கருதுகிறோம். இதனால் சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

    இதன் காரணமாக மாலை 6 மணிக்கு பிறகு வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகிறார்கள். உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறினால், அவர்கள் போனில் விசாரித்த பின்பே உள்ளே அனுமதித்து வருகிறோம். மற்றபடி வாகனங்கள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×