search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "struggle"

    • நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
    • பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் பழைய பேட்டையை அடுத்த கண்டியப்பேரி பகுதியில் ஊய்காட்டு சுடலை மாடசாமி கோவில் இருக்கிறது.

    கோடகன் கால்வாய் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் பின்புறமாக தற்போது அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இந்த இடத்தில் பொதுப்பணி துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்திய நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்த நிலையில் அளவீடு செய்ததில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று டவுன் தாசில்தார் விஜய லட்சுமி முன்னிலையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்ததால் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    • எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    • உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
    • 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.

    திருப்பூர்:

    தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், காடா துணி விற்பனை சரிவடைந்துள்ளது. அண்டை நாடுகளுடன் போட்டி போட இயலாத நிலையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு துணி உற்பத்தி முடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 5-ந்தேதி முதல் இன்று 25ந் தேதி வரை முழு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய உள்ள சூழலில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    இக்கட்டான சூழல் காரணமாக, உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் என எதிர்பார்த்தோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 20 நாட்களாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

    இதனால் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக பணிக்கு திரும்பவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் மீண்டும் கலந்து ஆலோசித்து, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே உள்ள நஞ்சன் கூடு தாலுகா பல்லூர் ஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்னம்மா (50). இவர் பந்திப்பூர் தேசிய பூங்கா அருகே உள்ள தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு பதுக்கி இருந்த ஒரு புலி திடீரென ரத்னம்மா மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் புலியிடம் இருந்து ரத்னம்மா தப்பிக்க முயன்றார். ஆனாலும் புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரத்னம்மாளின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஹெடியாலாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.மேலும் அந்த புலியை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர். 

    • தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும்.

    திருப்பூர்:

    தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்றும் பாராமல், பீக் ஹவர் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மின்சார நிலை கட்டணம் 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் சொந்த முயற்சியில் அமைத்த மேற்கூரை சோலார் மின் கட்டமைப்புக்கு யூனிட்டுக்கு 1.54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண உயர்வு மற்றும் பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி தொழில்துறையினர் போராடி வருகின்றனர்.

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி மாநில அளவிலான, அறப்போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மனிதசங்கிலி போராட்டம், வருகிற 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:- மின் கட்டண உயர்வால், திருப்பூர் பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இனியும் தொழில் நடத்த முடியாது என்பதால் பீக் ஹவர் மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண உயர்வுகளை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். அதன்படி வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும். அன்றைய தினம், திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தப்படும். தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் தமிழக அரசு அழைத்து பேசி, தீர்வு வழங்காதபட்சத்தில் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையின்படி மக்கள் நல பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தில் எவ்வித நியமன ஆணையும் வழங்காமல் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வரன்முறையுடன் கூடிய ஊதியத்தை கணக்கிட்டு அரசாணை வெளியிட வேண்டும்.

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் மாநில தலைவர் செல்ல பாண்டியன், மாநில பொதுச்செ யலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரங்கராஜ் உள்ளிட்ட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும், திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நல பணியாளர்கள் பேரணியாக வந்து பொதுமக்களிடம் யாசகம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
    • வக்கீல்கள் இமயம் சரவணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உருக்காலையை மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 250 நாட்களாக உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி நடைபெறும் 250- வது நாள் காத்திருப்பு போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, வக்கீல்கள் இமயம் சரவணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்,

    மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன் உள்பட ஏராளமான விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 5500 ஹெக்டர் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக முளைத்து வரும் நிலையில், மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் முறைப்படி வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால், சுமார் 4300 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது.வடிகால் வாய்க்கால்க ளை போர்க்கால அடிப்படை யில் தூர்வாரவே ண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை யிடம் முறையிட்டும், வேணாள்துறையை நடவடிக்கை எடுக்க வலியுறு த்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பாதிப்பிற்குள்ளாகிய செல்லூர் பகுதி விவசாயி கள், வடிகால் வாய்க்காலை தூர்வாராத பொதுப் பணித்துறையையும், கண்டுகொள்ளாத வேளாண்துறை யையும் கண்டித்து, வடிகால் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, போர்க்கா ல அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வாரி, வயல்களில் தேங்கியுள்ள அதிகப்படி யான மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாவட்ட வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாணவ அமைப்புகள் தீர்மானம்

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கத்தில் அனைத்து கல்லூரி மாணவ தலைவர்கள் ஆலோசனைக் கட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதுவையில் அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையை அரசு திணிக்கக்கூடாது.

    தேசிய கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை மட்டுமன்றி மாணவர்களின் ஆழமான கல்வி அறிவை பறிக்கும் என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். இதை ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. வரும் ஜனவரி மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சந்திரா தேசிய கல்வி கொள்கை சாதக பாதகங்களை விளக்கினார். பீபோல்டு பஷீர் தேசிய கல்வி கொள்கையின் உள் நோக்கங்களை விளக்கினார். தமிழ்ச்சங்கம் திருநாவுக்கரசு புதுவை மாநிலம் இழந்து வரும் உரிமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தாகூர் கலை கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, ராஜீவ்காந்தி கலைக்கல்லூரி மாணவ தலைவர்கள் மனோஜ், கவுதம், பிரதீப், ராஜ், ராகுல், பிருந்தா, நர்மதா, சாந்தினி, விஜயலட்சுமி, ரெஜினாமேரி, ஜெயசூர்யா, நிவேதா, கீர்த்தனா, கிரிதரன், வீரகவுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
    • பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார்.பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் கர்ண மஹாராஜா வரவேற்றார்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலமாக புதியதாக 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பு சம்பந்தமாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இந்த நிறுவனத்தின் மூலமாக இப்பணி செய்தால் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கே பயனற்றதாக ஆகிவிடும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய மண் வளங்களை அழிக்க கூடிய இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யும் பட்சத்தில் குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகிவிடும்

    ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே இந்தத் திட்டத்தை ஒருபோதும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்த விடாது.

    ஆகவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதை மீறி நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை கொண்டு வந்தால் அனைத்து சமுதாயத் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மக்களவை உறுப்பினர் தலைவர் அன்புமணி ராமதாசை அவர்களை வரவழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது

    இக்கூ ட்டத்தில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, திருவாடானை ஒன்றிய செயலாளர் மக்தூம் கான். ராமாபுரம் ஒன்றிய செயலாளர் ஷரீஃப்.

    மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வழுதூரில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை செயல்ப டுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பு இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

    • தீபாவளி போனஸ் கேட்டுகூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
    • இதில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் அரசு கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த ஆண்டுகள் வரை அரசு அறிவித்த பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு தீபாவளி பண்டி கைக்கு தற்காலிக தொழிலா ளர்களுக்கு போனஸ் வழங் கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து வேதனை அடைந்த தற்காலிக தொழி லாளர்கள், தாங்கள் ஏற்க னவே குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது தீபாவளி போனஸ் கிடை யாது என நிர்வாகம் கூறியி ருப்பதை கண்டித்து ஆலை வாயில் முன்பு கண்டன ஆர்பாட்டம் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் தற்கா லிக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால போனஸ் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட் டது.

    ஆர்பாட்டத்தில் தமிழ் நாடு பஞ்சாலை தொழிலா ளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன், டிஎம்பிடிஎஸ் மாவட்ட செயலாளர் கர்ணா உள்ளிட்ட தற்காலிக தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×