search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம் இடிப்பு"

    • நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.
    • பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் பழைய பேட்டையை அடுத்த கண்டியப்பேரி பகுதியில் ஊய்காட்டு சுடலை மாடசாமி கோவில் இருக்கிறது.

    கோடகன் கால்வாய் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் பின்புறமாக தற்போது அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இந்த இடத்தில் பொதுப்பணி துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்திய நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்த நிலையில் அளவீடு செய்ததில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், நீர்வழிப் பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று டவுன் தாசில்தார் விஜய லட்சுமி முன்னிலையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இருந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்ததால் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    • நாமக்கல் கடைவீதி அருகில் பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவிலில் வடக்கு பகுதியில் குறிப்பிட்ட இடம் பாப்பாயி என்பவருக்கு சொந்தமானதாகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கடைவீதி அருகில் பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பகுதியில் குறிப்பிட்ட இடம் பாப்பாயி என்பவருக்கு சொந்தமானதாகும்.

    அவர் தனது இடத்தை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த வழக்கு விசாரணையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 2 மாதத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று நகராட்சி, வருவாய் துறை, காவல் துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் கொண்டு கோவிலின் குறிப்பிட்ட பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.

    கோவில் வளாகத்தில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டன. மாரியம்மன் கோவில் இடிக்கப்படும் தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.
    • பல்லடம் பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான கட்டடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.

    இந்த நிலையில் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சி இடத்தை ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான கட்டடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    • அபாயகரமான நிலையில் இருந்ததால் நடவடிக்கை
    • அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது.

    அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன், நகராட்சிதுணைத்த லைவர் கமல ராகவன், என்ஜினீயர் சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    இதையடுத்து வகுப்பறை கட்டிடம் அமைச்சர் முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

    ×