என் மலர்
நீங்கள் தேடியது "human chain"
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் மற்றும் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் மனிதச்சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க பொருளாளர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகி சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட கொள்ளை நோய் நிபுணர் தண்டபாணி, சுகாதார நல கல்வியாளர் ஆறுமுகம், மாவட்ட நெஞ்சக நோய் நல்ல கல்வியாளர் மாரிமுத்துசாமி, சுகாதார மேற்பார்வையாளர், இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் மேலாண்மை குழு அமைப்பாளர் திருவிலஞ்சி குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் டி. பி .சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜெகவர், முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இக்பால் ராஜா, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் கோபு மற்றும் மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
- சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரையை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை ரெயிலடியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்பட 24 கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு கைகோர்த்து நின்றனர்.
இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டார். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், பொது செயலாளர்கள் பூதலூர் மோகன்ராஜ், சித்திரைக்குடி ஆண்டவர் வாண்டையார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மேலஉளூர் சிவானந்த வாண்டையார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், தஞ்சை மாநகர் மாவட்ட மனித உரிமை துறை காங்கிரஸ் தலைவர் ஒய்.அலாவூதீன், மாவட்ட ராகுல் காந்தி பேரவை தலைவர் திருவையாறு பூபதி, தகவல் அறியும் உரிமை பிரிவு மாநகர மாவட்ட தலைவர் செல்வம், மாநில விவசாய பிரிவு செயலாளர் மணிவண்ணன், நிர்வாகிகள் பாட்ஷாபாய், அய்யாறு, கோபால்அய்யர், ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர்அமர்சிங், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன்,சிபிஐ எம் எல் மாவட்ட நிர்வாகிராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர்அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
- விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் வன்முறையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்தும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
- மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளின் வகுப்புவாத அரசியலை கண்டித்து பல்லடத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
- இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் வெற்றிகரமாக நடைபெறும்.
- 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.
காரனை:
மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை.
சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.

இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ராமேசுவரத்தில் 11-ந் தேதி நடைபெறும் அனைத்து கட்சி மனித சங்கிலி குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- மக்கள் ஒற்றுமை, சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடக்கிறது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் வருகிற 11-ந் தேதி அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்படுகிறது.
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்ற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.
இதில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம்,, காங்கிரஸ் நகர் பொறுப்பாளர் ராஜீவ் காந்தி, ம.தி.மு.க. நகர் செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தை நகர செயலாளர் நாகராஜன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர பொருளாளர் மரியா ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
- சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- வருகின்ற 11-ந் தேதி நடக்க உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளருமான சாமிநடராஜன், மத்திய, மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்க பேசினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளார்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பது, கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் இதில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11ம்தேதி சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவது, வெற்றி பெற திரளாக பொதுமக்களை கலந்து கொள்ள செய்வது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணத்தால் மிகுந்த விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கலையரசி, அகஸ்டின், ரெங்கநாதன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன், மகேஸ்வரி, சின்னப்பொண்ணு, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழகம் முழுவதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.
மனித சங்கிலி
வேலூர் மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் டீக்காராமன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளங்கோ, சஜன் குமார், ம.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கோபி, பழனி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் கப்பல் மணி, கணேஷ் தங்கமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் வரை வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தனர்.
- ராமநாதபுரத்தில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மனித சங்கிலி நடைபெறுகிறது.
- முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு தலைவரும், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசை கண்டித்து வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.முதுகுளத்தூரில் நடை பெறும் போராட்டம் எனது தலைமையிலும், ராமநாதபுரத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, கோபால் தலைமையிலும், பரமக்குடியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து தலைமையிலும், தொண்டியில் பொறுப்புக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையிலும், ராமேசுவரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜன் தலைமையிலும் நடக்கிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
மறுநாள் (12-ந்தேதி) ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
- அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் வரும் அக்டோபா் 2ந் தேதி 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-
தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக்கூடாது என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.
காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2ந் தேதி 50 இடங்களில் ஆா்எஸ்எஸ். அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.
ஆகவே சங்பரிவாா்களின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படியில், திருப்பூா் மாவட்டத்தில், திருப்பூா் மாநகரம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் பல்லடம் ஆகிய 7 இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்குமாறு பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் வழி காட்டுதலை தந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயலும் சங்பரிவார்- சனாதன சக்திகளின் சூழ்ச்சியை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த மனிதச் சங்கிலியில் அனைத்து தரப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை அ.தி.ம.மு.க. மனதார வரவேற்கிறது. மனிதச்சங்கிலியில் திரளாக பங்கேற்போம்.
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, தமிழக வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாத்திட இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் தமிழகம் முழுவதும் அ.தி.ம.மு.க.வினர் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய மனுதர்ம வாதிகள் முயற்சிப்பதை முறியடிப்போம். மதவாதம் பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






