search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
    X

    தஞ்சையில் நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

    தஞ்சையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

    • சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரையை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி தஞ்சையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சை ரெயிலடியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்பட 24 கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு கைகோர்த்து நின்றனர்.

    இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டார். தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், பொது செயலாளர்கள் பூதலூர் மோகன்ராஜ், சித்திரைக்குடி ஆண்டவர் வாண்டையார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மேலஉளூர் சிவானந்த வாண்டையார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், தஞ்சை மாநகர் மாவட்ட மனித உரிமை துறை காங்கிரஸ் தலைவர் ஒய்.அலாவூதீன், மாவட்ட ராகுல் காந்தி பேரவை தலைவர் திருவையாறு பூபதி, தகவல் அறியும் உரிமை பிரிவு மாநகர மாவட்ட தலைவர் செல்வம், மாநில விவசாய பிரிவு செயலாளர் மணிவண்ணன், நிர்வாகிகள் பாட்ஷாபாய், அய்யாறு, கோபால்அய்யர், ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர்அமர்சிங், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன்,சிபிஐ எம் எல் மாவட்ட நிர்வாகிராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர்அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×