என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடந்த தீர்மானம்
- சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- வருகின்ற 11-ந் தேதி நடக்க உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளருமான சாமிநடராஜன், மத்திய, மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்க பேசினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளார்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பது, கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் இதில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11ம்தேதி சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவது, வெற்றி பெற திரளாக பொதுமக்களை கலந்து கொள்ள செய்வது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணத்தால் மிகுந்த விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கலையரசி, அகஸ்டின், ரெங்கநாதன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன், மகேஸ்வரி, சின்னப்பொண்ணு, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்