search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-tobacco"

    தென்காசியில் புகையிலை எதிர்ப்பு மனிதச்சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    தென்காசி:

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் மற்றும் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் மனிதச்சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க பொருளாளர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகி சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

    மாவட்ட கொள்ளை நோய் நிபுணர் தண்டபாணி,  சுகாதார நல கல்வியாளர் ஆறுமுகம்,  மாவட்ட நெஞ்சக நோய் நல்ல கல்வியாளர் மாரிமுத்துசாமி, சுகாதார மேற்பார்வையாளர், இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி,  செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் மேலாண்மை குழு அமைப்பாளர் திருவிலஞ்சி குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர்  சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
    ×