என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.அதனை தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தொடங்கி வைத்தார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை சென்று திரும்ப தொழில் பயிற்சி நிலையம் வந்தது. முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது போதை மற்றும் புகையிலை பொருட்களை ஒழித்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதை மற்றும் புகையிலை பொருள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதில் அளித்தனர். தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்