search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி"

    • ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
    • தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "இந்திய விடுதலை போராட்டத்துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.பல்வேறு மதம், மொழி, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும்.

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.

    இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.

    ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    • எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    அரியலூர்இந்திரா காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு

    அரியலூர்

    இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள காந்தி-காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், நகரத் தலைவர் மா.மு.சிவக்குமார், மகளிரணித் தலைவி மாரியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் புகழ், வட்டாரத் தலைவர்கள் அரியலூர் கண்ணன், திருமானூர் கங்காதுரை, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
    • 77-வது சுதந்திரதினத்தையொட்டி நடந்தது

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழாவை யொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுஉள்ளது. தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலி க்கும் வகையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி, காமராஜர் மண்டபங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் முன்னொழியில் விழும் காந்தி காமராஜர் மண்ட பங்களை பார்வையிட்டு செல்வதோடு மட்டு மின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

    காந்தி நினைவு மண்டபவளாகத்தில் அமைந்துள்ள மூவர்ண கொடியை தாங்கி நிற்கும் பாரத மாதா சிலையும் வர்ணங்கள் பூசப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கு வகையில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
    • நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

    உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில்  ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.

    ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
    • காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது.

    கோவை,

    கோவை குறிச்சியில் உள்ள சிட்கோவில், தமிழ்நாடு பஞ்சாலைக்கழக தறி கூடத்தை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2 வருடங்களாக இந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது.

    தற்போது பழைய விசைத்தறி எந்திரங்களை எடுத்து விட்டு ஏர்ஜெட் எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏர்ஜெட் எந்திரத்தில் என்னென்ன தேவை இருக்கிறது என ஆய்வு செய்துள்ளோம்.

    இப்போது 12 ஏர்ஜெட் எந்திரங்கள் இருக்கிறது. 12 ஏர்ஜெட் எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது.

    ஏர்ஜெட் எந்திரம் அமைத்து அதனுடன் சோலார் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை மிகவும் லாபம் இருக்கும் துறையாக மாறும்.

    நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது.

    5 தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது. அதை நாம் எடுக்க முடியாது. மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. ஆனால் 15 லட்சம் பேல்கள் மட்டுமே இங்கு உற்பத்தியாகின்றது.

    காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும் காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது.

    காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. போதிய நிதி இல்லாததால் தொடங்கு வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.ஆய்வின்போது கைத்தறிதுறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறி துறை கமிஷனர் விவேகானந்தன், துணை மேயர் வெற்றிச்செல்வன் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் இருந்தனர்.

    • திருச்சியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா உருவ சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது

    திருச்சி:

    மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கும், கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், மாநில துணைத்தலைவரும், முன்னாள் மேயருமான சுஜாதா, மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளி, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாநில கலைப்பிரிவு துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ,

    கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்ட்டு, ஆனந்தராஜ், ஓவியர் கஸ்பர், மாவட்ட துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் செந்தில்நாதன், சிக்கல் சண்முகம், வில்ஸ் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணா சிலை விக்டர், பட்டேல், அமிர்தவல்லி, ஹெலன், டேவிட், பிரியங்கா பட்டேல், சுந்தர்ராஜன், வழக்கறிஞர் மோகனாம்பாள், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, மகளிர் அணி ஷீலா செல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்தநாள், காமராஜ் நிணைவு தினம், முசிறி கைகாட்டியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் திருச்சி கலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி, காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    வட்டார தனலவர் எஸ்.ஆர்.நல்லேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் முகமது ஜான், லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி இன்று திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா உருவ சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, இளைஞர் அணி சிவகணேசன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் தனசேகர், மாவட்ட செயலாளர் சரவணன், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி நந்தகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமது உசேன், பாலக்கரை கோட்டத்தலைவர் கண்ணன், தாராநல்லூர் வடிவேலு, காமராஜர் பேரவை மூர்த்தி, முருகேசன், பாண்டியராஜன், ஸ்டீபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. சார்பில் மகாத்மா காந்திஜி சிலைக்கு கட்சியின் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அலங்கராஜ், மில்டன் குமார், பிரீத்தா விஜய் ஆனந்த், பகுதி செயலாளர் என்.எஸ்.எம்.மணிகண்டன், கலைப்புலி பாண்டியன், மோகன், லோகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • உழவாலயத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    • அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்12-ந் தேதி கன்னியாகுமரி எடுத்துவரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது.
    • காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும்

    கன்னியாகுமரி :

    1948-ம் ஆண்டு ஜனவரி மாதம்30-ந்தேதி டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்றபோது கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

    பின்னர் அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்12-ந் தேதி கன்னியாகுமரி எடுத்துவரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி கடற்கரை யில் வைக்கப்பட்டது. அவரது அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் அதை நினைவு கூறும் வகையில் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த நினைவு மண்டபத் துக்கு 1954-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி ஆச்சாரியாகிருபளானியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த மண்டபம் 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி அப்போதைய கேரள கவர்னர் பி.எஸ்.ராவ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மரணம் அடையும் போது அவரது வயது 79. அவரது வயதை குறிக்கும் வகையில் இந்த மண்டபம்79அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நினைவு மண்ட பத்தில் உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும். காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி யானவருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி பகல் 12 மணிக்குகன்னியாகுமரி காந்திநினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட் டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம். தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தி 182- வது பிறந்தநாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி காலை 11 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடக்கிறது.

    விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரகிரண் பிரசாத், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார் கள்.

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

    காந்தி மற்றும் சவார்கர்

    ×