search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oommen Chandy"

    • 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அரசின் அறிவிப்பை மருத்துவக் கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு இடங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்பு இறுதிச்சடங்குக்காக திருவனந்தபுரத்தில் இருந்து அவரது செந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு அரசு போக்குவரத்து கழக பேரூந்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுநின்று உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    உம்மன்சர்ண்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் துக்க நாளாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அந்த இருநாட்களிலும் நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் உம்மன்சாண்டி மறைந்த 18-ந்தேதியன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கலைநிகழச்சி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், உம்மன் சாண்டி மறைவையடுத்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த துக்க நாளில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

    மது விருந்தும் நடந்துள்ளது. இது குறித்து காவல் மற்றும் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தேன். அரசின் அறிவிப்பை மருத்து வக்கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது. இதனால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • சாலையின் இருபுறத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
    • உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துக் கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மரணம் அடைந்தார்.

    அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் அவரது உடல் பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்பு திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அதன்பிறகு இரவில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டியின் உடல், பின்னர் அங்கிருந்து கேரள மாநில காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.

    உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து இரவில் உம்மன்சாண்டியின் உடல் மீண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு கொண்டு செல்ல, அவரது இறுதி ஊர்வலம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உம்மன் சாண்டியின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்சில் எடுத்துச் செல்லப்பட்டது.

    சாலையின் இருபுறத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றதால் உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஊர்ந்தபடியே சென்றது.

    அவர் வாகனம் வந்த இடங்களில் எல்லாம், இரவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள. இதனால் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு புறப்பட்ட உம்மன்சாண்டி இறுதி ஊர்வலம், சங்கனாச்சேரிக்கு நேற்று காலை 6 மணிக்கே வந்தடைந்தது.

    மற்ற இடங்களைப் போன்று அங்கும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் உம்மன்சாண்டி இறுதி ஊர்வல வாகனம் சங்கனாச்சேரியை கடந்து செல்லவும் வெகுநேரம் ஆனது. பின்பு உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலம் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியை நோக்கி சென்றது. புதுப்பள்ளியை ஊர்வலம் அடைந்ததும், உம்மன்சாண்டியின் மூதாதையரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் மாலையில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு உம்மன்சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது கடைசி விருப்பத்தின்படி, எந்தவித அரசு மரியாதையும் இன்றி அவரது உடலை அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் கேரள மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு முதலில் சம்மதம் தெரிவிக்காக கேரள அரசு, பின்னர் உம்மன்சாண்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனால் உம்மன்சாண்டியின் உடல் அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது.

    உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்-மந்திரி பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

    • திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு கோட்டயத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி(வயது79) புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை காலமானார்.

    அப்போது அவரது மனைவி மரியம்மா உம்மன், மகன் சாண்டி உம்மன், மகள்கள் அச்சு உம்மன், மரியா உம்மன் ஆகியோர் உடனிருந்தனர். உம்மன்சாண்டியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூரு இந்திராநகரில் உள்ள அவரது நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உம்மன்சாண்டிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு உம்மன்சாண்டியின் உடல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருவனந்தபுரத்தில் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்து உம்மன்சாண்டியின் உடல் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது.

    பின்பு கேரள மாநில காங்கிரஸ் மாநில தலைமையகமான இந்திரா பவனுக்கு உம்மன்சாண்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதன்பிறகு உம்மன்சாண்டியின் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் உள்ள இல்லத்திற்கு ஊர்வலமாக செல்லப்படுகிறது. ஊர்வலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்தில் அவரது உடல் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    கட்சியினர் பேருந்தின் முன்னும் பின்னும் கண்ணீர்மல்க நடந்து சென்றனர். நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உம்மன்சாண்டியின் இறுதி ஊர்வல வாகனம் ஊர்ந்து சென்றது. வழிநெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

    உம்மன்சாண்டியின் உடல் கோட்டயம் திருநக்கரை மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு நாளை பிற்பகல் 2 மணியளவில் உம்மன்சாண்டியின் உடல் புதுப்பள்ளியில் உள்ள தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன் சாண்டியின் உடல் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

    நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கின்போது உம்மன்சாண்டிக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு மரியாதையை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். தான் இறந்த பின் இறுதிச்சடங்கை எளிய முறையில் நடத்தவிரும்புவதாக உம்மன் சாண்டி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தாகவும், அவரது விருப்பப்பட எளிய முறையில் இறுதிச்சடங்கை நடத்தி அடக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு கோட்டயத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மதியம் விடுமுறை விடப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு- கார்கே
    • நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம்- ராகுல் காந்தி

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

    உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில்  ''நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு'' என்றார்.

    ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ''இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவர்- மோடி
    • மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி- பினராயி விஜயன்

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 79 வயதாகும் உம்மன் சாண்டியின் மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மோடி தனது இரங்கல் குறித்து டுவிட்டர் செய்தியில் ''மிகவும் எளிமையாக பழகக்கூடிய, தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டவரை நாம் இழந்துள்ளோம். நாங்கள் இருவரும் அவரவர் மாநில முதல்வராகவும், நான் பிரதமரான பின், சந்தித்த நிகழ்வுகளை திரும்பி பார்க்கிறேன். அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடன் என்னுடைய எண்ணங்கள் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ''ஒரே வருடத்தில்தான் நாங்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் வாழ்வில் இருந்து அரசியல் வாழ்வு வரை ஒரே நிலையில் இருந்தது. தற்போது அவரது பிரிவு மிகவும் வருதத்தை அளிக்கிறது. மக்கள் வாழ்வில் மிகவும் நெருக்கமாக இருந்தவர், திறமையான நிர்வாகி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • 79 வயதான உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
    • இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில், இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் இன்று செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.

    இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.
    • கடந்த சில மாதமாக உடல்நலக் குறைவால் கடும் அவதிப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

    கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில், கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.
    • நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

    இந்நிலையில், உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் உடல்நலம் தேற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதமும் உம்மன் சாண்டி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    • காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
    • உம்மன் சாண்டிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.

    கேரள மாநில முதல்-மந்திரியாக 2 முறை பதவி வகித்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உம்மன் சாண்டிக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    உம்மன் சாண்டிக்கு அவரது குடும்பத்தினர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என தகவல் பரவியது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குற்றச்சாட்டை உம்மன் சாண்டியின் உறவினர்கள் மறுத்தனர். அவரது மகனும், தனது தந்தைக்கு உரிய சிசிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார். இதற்கிடையே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    மேலும் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் உம்மன் சாண்டிக்கு மேல் சிகிச்சை அளிக்க அவரை பெங்களூரு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை அவர் தனி விமானம் மூலம் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது பற்றி உம்மன் சாண்டி கூறும்போது தனக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து எந்த சர்ச்சையும் வேண்டாம், என்றார்.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.
    • இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

    சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில், உம்மன் சாண்டியை அவரது மனைவி, குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் கேரளாவில் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை உம்மன் சாண்டி தற்போது மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, உம்மன் சாண்டி மகன் பேஸ்புக் மூலம் கூறுகையில், அப்பா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தைக்கு சிறிதளவு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    • கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.
    • மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.

    அப்போது மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார். மேலும் உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நேற்று சி.பி.ஐ. திருவனந்தபுரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

    சோலார் பேனல் அமைக்க அனுமதி கேட்டு அணுகியபோது விருந்தினர் மாளிகையில் உம்மன் சாண்டி உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று சரிதாநாயர் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். #SarithaNair #OommenChandy
    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர்.

    கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் அமைத்து தரும் நிறுவனத்தை சரிதாநாயர் தொடங்கினார். இதற்காக பலரிடமும் பணம் வசூலித்தார்.

    இதில், ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வாங்கிய பின்பு சரிதாநாயர் கூறியபடி, சோலார் பேனல் அமைக்கவில்லை. இதுபற்றி பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதில், சரிதாநாயர் தங்களிடம் பணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறி இருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதா நாயரை கைது செய்தனர்.

    கைதான சரிதாநாயர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார்.

    அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நீதிபதி சிவராஜன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டது.

    கமி‌ஷன் விசாரணை நடந்து வந்த நிலையில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. அவர்கள் முன்பு விசாரணை கமி‌ஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரிதாநாயருக்கு அரசியல் பிரமுகர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.



    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சினை தீவிரமாக இருந்த போது, திடீரென உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சபரிமலை பிரச்சினையை திசை திருப்ப அரசு நாடகமாடுவதாகவும், தங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு சட்ட ரீதியாக பதில் அளிப்போம் என்றும் உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் தெரிவித்தனர்.

    உம்மன்சாண்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா பதில் அளித்தார். அதில், சரிதாநாயர் சமீபத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரிலேயே இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

    இந்நிலையில் சரிதாநாயர் போலீசில் அளித்த புகார் விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சோலார் பேனல் நிறுவனத்திற்கு அனுமதி கேட்டு அரசை அணுகினேன். இதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் என்னை அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பிறகு உம்மன்சாண்டி அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

    சோலார் பேனல் அமைக்க தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். மேலும் என்னை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருமாறு அழைத்தார். அவரை பார்க்க நானும் அங்கு சென்றேன். அப்போது அவர், என்னை உடல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

    சோலார் பேனல் விவகாரத்தில் உம்மன் சாண்டி எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொந்தரவுகள் கொடுத்தார். இதுபோல வேணுகோபால் எம்.பி. ஆலப்புழாவில் உள்ள ரோஸ் ஹவுஸ் மாளிகையில் என்னை சந்தித்தார். அவரிடம் என்னை காங்கிரஸ் மந்திரி அணில்குமார் அழைத்துச் சென்றார்.

    ரோஸ் ஹவுசில் வேணுகோபால் எம்.பி. என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இவர்களால் நான் பலமுறை பாதிக்கப்பட்டேன்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

    சரிதாநாயர் புகாரில் தெரிவித்துள்ள சம்பவங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பவம் நடந்த விருந்தினர் மாளிகை, ரோஸ் ஹவுசுக்கு சென்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  #SarithaNair #OommenChandy



    ×