search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KAMARAJAR GARMENT"

    • திருச்சியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா உருவ சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது

    திருச்சி:

    மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 47-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கும், கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், மாநில துணைத்தலைவரும், முன்னாள் மேயருமான சுஜாதா, மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளி, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாநில கலைப்பிரிவு துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ,

    கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்ட்டு, ஆனந்தராஜ், ஓவியர் கஸ்பர், மாவட்ட துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் செந்தில்நாதன், சிக்கல் சண்முகம், வில்ஸ் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணா சிலை விக்டர், பட்டேல், அமிர்தவல்லி, ஹெலன், டேவிட், பிரியங்கா பட்டேல், சுந்தர்ராஜன், வழக்கறிஞர் மோகனாம்பாள், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, மகளிர் அணி ஷீலா செல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்தநாள், காமராஜ் நிணைவு தினம், முசிறி கைகாட்டியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் திருச்சி கலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி, காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    வட்டார தனலவர் எஸ்.ஆர்.நல்லேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் முகமது ஜான், லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி இன்று திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா உருவ சிலைக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் என்.ரவி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, இளைஞர் அணி சிவகணேசன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் தனசேகர், மாவட்ட செயலாளர் சரவணன், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி நந்தகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமது உசேன், பாலக்கரை கோட்டத்தலைவர் கண்ணன், தாராநல்லூர் வடிவேலு, காமராஜர் பேரவை மூர்த்தி, முருகேசன், பாண்டியராஜன், ஸ்டீபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. சார்பில் மகாத்மா காந்திஜி சிலைக்கு கட்சியின் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அலங்கராஜ், மில்டன் குமார், பிரீத்தா விஜய் ஆனந்த், பகுதி செயலாளர் என்.எஸ்.எம்.மணிகண்டன், கலைப்புலி பாண்டியன், மோகன், லோகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×