என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Social Media"
- தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார்.
- எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார்.
டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், காதலியை கண்டுபிடிக்க ஆன்லைன் தளங்களில் விண்ணப்பிக்கும் நிலையில், 70 வயது முதியவர் ஒருவர் தனது காதலியை கண்டுபிடிக்க வாரம் தோறும் ரூ.33 ஆயிரம் செலவிடுகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அல் கில்பெர்டி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனிமையில் வசித்து வரும் இவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார். இதற்காக வாரத்திற்கு 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம்) கட்டணம் செலுத்துகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு விசுவாசமான ஒருவர் வேண்டும். அவர் உண்மையானவராகவும், எனது நலனில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். சரியான நபரை சந்திக்க நான் ஐரோப்பா வரை செல்வதற்கும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார். அவர் வைத்துள்ள விளம்பர பலகையை பார்த்து 400-க்கும் மேற்பட்ட அழைப்புகள், 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளது. எனினும் அதில் பெரும்பாலும் பணம் கேட்டு வரும் நபர்களாகவே இருப்பதாகவும், சரியான காதலியை தேடிக்கொண்டிருப்பதாகவும் கில்பெர்டி கூறினார்.
- பிகானர் பகுதியில் சத்தா பஜாரில் ‘பீடா’ கடை நடத்தி வருபவர் பூல்சந்த்.
- கைகளில் ஏராளமான மோதிரங்கள், கழுத்தில் அதிகளவில் தங்க செயின்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுவதும் தங்க நகைகளை அணிந்துள்ளார்.
தங்க நகைகள் அதிகம் அணிவதை பெண்கள் விரும்புவது சகஜம். ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் ஒன்றிரண்டு நகை மட்டுமே அணிவார்கள். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 'பீடா' கடைக்காரர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து கலக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள பிகானர் பகுதியில் சத்தா பஜாரில் 'பீடா' கடை நடத்தி வருபவர் பூல்சந்த். இவர் கைகளில் ஏராளமான மோதிரங்கள், கழுத்தில் அதிகளவில் தங்க செயின்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுவதும் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கடையில் 'பீடா' வாங்குவதற்கு வரும் கூட்டத்தை விட இவரை பார்ப்பதற்காகவே கூட்டம் அலைமோதி வருகிறதாம்.
பூல்சந்தின் குடும்பம் பாரம்பரியமாக இந்த கடையை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் குறைந்த விலையில் 'பீடா' விற்பனை செய்யப்படுவதோடு, இவரை பார்க்கவும் கூட்டம் குவிவதால் வியாபாரம் நன்றாக நடப்பதாக கூறுகிறார்கள்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
- நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார்.
பிரபல பாடகியான டெய்லர் ஷிப்ட் பாப் பாடல்கள் பாடுவதில் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். தனித்துவமான இசை ஆல்பங்களை வெளியிட்டு வரும் இவர் நாடு முழுவதும் பயணித்து மேடை அமைத்து பாடல்களையும் பாடி வருகிறார். பல கோடி ரசிகர்களை கொண்ட இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரில் மேடை கச்சேரியில் பாடல்கள் பாடினார்.
அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார். பின்னர் அவருக்கு இசைநிகழ்ச்சிகளில் அணிந்து கொண்ட தொப்பி ஒன்றை பரிசாக கொடுத்தார்.
இந்த நிகழ்வு அப்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுப்பொருளானது. இந்தநிலையில் டெய்லர் ஷிப்டிடம் நினைவு பரிசு பெற்ற 9 வயது சிறுமி நோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளவாசிகள் இணையத்தில் பரவ செய்து வைரலாக்கி வருகின்றனர்.
- தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர்.
- தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.
ஊட்டி:
கோடை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் தற்போது வறண்டு காணப்படுகிறது. அங்கு பச்சைப்பசேல் பசுமையை பார்ப்பது அரிதாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கட்டிடம் கட்டுமான பணிகள் காரணமாக அங்குள்ள 4 பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கும்கி யானைகள் மாயார் ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.
மேலும் அவை ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி உடல் முழுவதும் வாரி இறைத்து உற்சாக குளியல் போட்டன. முதுமலை மாயார் ஆற்றுக்கு பாகனை சுமந்து வந்த யானை, ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போடுவது தொடர்பாக வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சமீபத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பஸ் புறப்பட்ட சில நேரத்தில் வளைவில் திரும்பும் போது பஸ்சின் இருக்கை கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று இயங்கி வருகிறது. ஆம், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இன்றி முழுவதுமாக திறந்த நிலையில் பஸ் புறப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால் வெளியில் வீசும் குளிர்காற்று பஸ்சின் உள்ளே தான் முழுவதுமாக வீசுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பஸ் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்த சில நாட்களுக்குள் நாகையில் பின்பக்க கண்ணாடி இன்றி அரசு பஸ் இயங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந்தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை 'ஆன்' செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
- வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனித்திறமைகள் கொண்ட சிறுவர், சிறுமிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் சிங்கத்தின் கர்ஜனையை கச்சிதமாக பின்பற்றும் ஒரு சிறுமியின் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ரிலே கே ஸ்காட் என்ற அந்த சிறுமி, சக்தி வாய்ந்த சிங்கம் கர்ஜிப்பது போன்று தனது வாயால் கர்ஜித்து காட்டி அவரது அசாத்திய திறனை வெளிப்படுத்துகிறார். மேலும் ரிலேயின் தாயார், தனது மகளிடம் உனது சிங்க சத்தம் அனைவருக்கும் பிடித்திருந்ததாகவும், அது உண்மை என்று அவர்கள் நினைத்ததாகவும் கூறுவதையும் காண முடிகிறது. பேட்டன் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதை நீங்கள் சிறுவயதில் கற்கவில்லை என்றால், பெரியவர்களாகிய நீங்கள் அதை பெற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் எனவும், மற்றொரு பயனர், சிறுமியின் தாயார் அவளைப் பற்றி பெருமைப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
- ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
- பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காதலை காதலியிடம் முன்மொழிய இளைஞர்கள் பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தியது முதல் பறக்கும் விமானத்தில் சக பயணிகள் மத்தியில் வெளிப்படுத்துவது வரை ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சூறாவளிக்கு முன்பு ஒரு இளம்ஜோடி மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்த காட்சிகள் உள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கடந்த வாரம் சக்தி வாய்ந்த சூறாவளி காற்றுடன் புயல் வீசியது.
அப்போது அங்கு உள்ள ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற ஒரு இளம்ஜோடி சூறாவளிக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 2 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
also i proposed to my partner today!! we pulled over so we could see the tornado that was ~40 min from us. we both love storms and storm chasing so i wanted to propose in front of a storm. i never thought i would actually have the opportunity to do it in front of a tornado pic.twitter.com/kLbEZOD8A6
— ?♡ june bug ♡? SAW FNOWAE (@g00dluckbabe) April 26, 2024
- இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது.
- சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டம், இருக்கைகளுக்கு சண்டை போட்ட பயணிகள், இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குழு ஒன்று பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடும் காட்சிகள் உள்ளது. அந்த குழுவில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அனைவருமே பாரம்பரிய பாடல்களை பாடிய நிலையில், சிறிது நேரத்தில் அனைவரும் குழுவாக சேர்ந்து நடனமாடுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் பாரம்பரிய நடனத்தை பாராட்டினாலும், பொது இடங்களில் இதுபோன்ற நடனமாடுவது சரியல்ல என பதிவிட்டனர்.
சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
- சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
- டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைதான நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அந்நபர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் ரீல்ஸ் எடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
VIDEO | Delhi Police arrested a person after his reel went viral on social media. In the video, the person can be seen sitting on a chair in the middle of the road along with his motorcycle.
— Press Trust of India (@PTI_News) April 27, 2024
(Source: Third Party/PTI)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/WfN95iYciT
- எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
- பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் தாகத்தால் மிகவும் தவிக்கின்றனர். இந்நிலையில் தாகத்தில் இருந்து நிவாரணம் தேடி ஒரு வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரை சேர்ந்த அக்ஷத் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வீட்டின் ஜன்னல் திறந்து கிடக்கும் நிலையில், அதன் வழியாக குரங்குகள் வீட்டின் சமையல் அறைக்குள் செல்கின்றன. அதில் ஒரு குரங்கு சமையல் அறையில் உள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை நோக்கி செல்கிறது. பின்னர் எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.
Monkeys are thirsty: Attacking society and homes through kitchen windows in search of water.
— Akshat Tak (@akshattak) April 22, 2024
The Bangalore water crisis has hit animals harder than humans.
Let's conserve water to help them, too.@peakbengaluru pic.twitter.com/6gpc9JLVc6
- இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் பலரும் வித்தியாசமான செயல்கள் மற்றும் சாகசங்களை செய்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை டிரைவர் வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன. சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உள்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் வீடியோ உள்ளது.
இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், வித்தியாசமான வடிவமைப்பிற்காக கார் உரிமையாளரை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்