search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shreyas Iyer"

    • இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார். இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது கடினம் தான். இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பும்ரா மற்றும் முதுகு காயத்தால் அவதிப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ராவுக்கு தற்போது வலி எதுவுமில்லை. டாக்டரின் ஆலோசனைபடி ஆபரேஷன் முடிந்த 6 வாரத்துக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு பழைய உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சி திட்டத்தை பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 'முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
    • ஏப்ரல் 5-ம் தேதியன்று பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் கொல்கத்தா மோதுகிறது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 கோப்பைகளை வென்று 3-வது வெற்றிகரமான அணியாக திகழும் கொல்கத்தா 2014-க்குப்பின் 3-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் காயத்தால் வெளியேறியதால் நிதிஷ் ராணா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    அவரது தலைமையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்றது. ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெறும் பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரரை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுவரை 64 போட்டிகளில் 1522 ரன்களை 137.62 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

    மேலும் ஐபிஎல் தொடரில் 2017, 2018 ஆகிய சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடியிருந்த அவர் கடைசியாக 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். 

    • பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார்.
    • ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் தொடக்கத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். அணியின் பேட்டிங் வரிசையே ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது.

    ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்தது.

    2011ம் ஆண்டுக்கு பின் ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணிக்கு இந்த முறை மீண்டும் சொந்த மண்ணில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதற்காக தற்போது இருந்தே இந்திய அணி திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

    ஆனால் இந்தியாவின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

    சற்று 50 கிரிக்கெட்டிற்கான இந்திய அணியின் வழக்கமாக 4வது இடத்தில் விளையாடுவது ஷ்ரேயாஸ் ஐயர் தான். கடந்தாண்டு அவர் தான் அதிக ரன்களை இந்தியாவுக்காக அடித்திருந்தார். விரைவில் அவர் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கோரி வரும் சூழலில் இந்தியாவின் திட்டத்தில் இருந்தே அவர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகுவலி பிரச்சினைக்காக லண்டன் புறப்படவுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து பழைய ஃபார்முக்கு வருவதற்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

    ஐபிஎல் தொடரை முடித்தவுடனேயே உலகக்கோப்பைக்கான திட்டத்தில் இந்திய அணி குதிக்கவுள்ளது. இப்படி இருக்கையில் ஷ்ரேயாஸ் ஐயரால் சரியான நேரத்தில் இந்திய அணியுடன் இணையமாட்டார். எனவே அவரின் 4வது இடத்தை இனி சூர்யகுமார் யாதவ் தான் பார்த்துக் கொள்ளவிருக்கிறார். 50 ஓவர் ஃபார்மெட்டில் இன்னும் ஃபார்முக்கு வராத சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரவுள்ளதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    • இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மேலும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடவில்லை. 4-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலி காரணமாக அவர் களம் இறங்கவில்லை. இதன் காரணமாகவே ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் விலகி உள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது உலக கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முதுகில் ஏற்பட்ட காயத்தால் நான் நீண்ட நாட்கள் அவதிப்பட்டேன். இதன் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாட்கள் என்னால் இடம்பெற முடியாமல் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.

    ஆனால் அவர் அணியில் இடம்பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்.

    முதுகு வலியினால் அணியில் இடம்பெறாமல் இருக்கும் நட்சத்திர வேகப்பந்து வீரர் உலக கோப்பைக்கு தேர்வு செய்வார் என்று நம்புகிறேன். அவர் அணியில் இடம்பெறாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    • காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளார்.
    • இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்கவில்லை.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்க வரவேயில்லை.

    முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், 4-வது நாள் ஆட்டத்திலும், 5-வது நாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், தற்போது தொடர் முடிந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், வரும் 17-ம் தேதி நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

    இதுவரையில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக யாரும் அறிவிக்கப்படாத நிலையில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
    • 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் பேட்டிங் செய்யாமல் போட்டியில் இருந்து விலகினார்.

    அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவற விட்டு இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார்.

    அத்துடன் வருகிற 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம் தான். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    • முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை.

    இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

    பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவருக்கு காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதிக்கு தேர்வானதை அடுத்து அவருக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

    2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற வீரர்களின் விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

    • முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார்.
    • 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

    அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • முதுகு வலி காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்.
    • ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் ரஜத் பட்டிதார் அணியில் இடம்பிடித்துள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

    ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் அணியில் இடம்பிடித்துள்ள பட்டிதார் (வயது 29) இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் 51 முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1648 ரன்கள் சேர்த்துள்ளா. 34.33 சராசரி, 97.45 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

    • ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார். 

    • 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    • அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.

    மிர்பூர்:

    வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.

    • டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
    • சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

    புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.

    முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×