search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேசன் ராய்"

    • ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்),
    • அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவிட் வில்லே (எல்.எஸ்.ஜி.) ஆகியோர் விலகியுள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து இங்கிலாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படும் வீரரகள் காயம் காரணமாக சில நேரங்களில் விளையாட முடியாமல் போகலாம். சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்கான ஐபிஎல் தொடரை புறக்கணிக்கலாம். சிலர் சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் வொர்க்லோடு காரணமாக ஐபிஎல் தொடரை தவிர்ப்பது உண்டு.

    ஆனால் இந்த சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகமான வீரர்கள் விலகியுள்ளனர். ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ஏற்கனவே விலகியிருந்தனர்.

    ஜேசன் ராய், ஹாரி ப்ரூக் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவாக அறிவித்திருந்தனர். மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லே தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பட்லர், பிலிப் சால்ட், சாம் கர்ரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
    • கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.

    ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.

    ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜேசன் ராய் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பில் சால்ட், சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் கேட்க முன்வரவில்லை. அதிலும் குறிப்பாக, அவர் ஏலத்தில் எடுக்கப்படாத சில தினங்களுக்கு முன்புதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பில் சால்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பில் சால்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன், 639 ரன்களை எடுத்துள்ளார். மேலும். ஐ.சி.சி. டி20 தரவரிசையில் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனாக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் எப்போதும் இங்கிலாந்து அணியை விட்டு விலக மாட்டேன்.
    • நாட்டுக்காக விளையாடுவது என்றும் தனக்கு பெருமையான காரியம் என்றும் தெரிவித்துள்ளது.

    ஐபிஎல் போன்ற டி20 போட்டிகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் பணமும் கிடைப்பதால், பெரும்பாலான வீரர்கள் தாய்நாட்டைப் புறக்கணித்து ஐபிஎல் போன்ற டி20 தொடருக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

    மேலும் ஐபிஎல் போலவே அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர் தென்னாபிரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்களுடைய கிளை அணைகளை வாங்கியுள்ளனர்.

    அந்த வரிசையில் கிரிக்கெட் மிகவும் பிரபலம் இல்லாத அமெரிக்காவில் புதிதாக மேஜர் லீக் டி20 தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற ஐபிஎல் அணிகள் தங்களுடைய கிளைகளை வாங்கியுள்ளன.

    அமெரிக்க்காவில் கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 2 வருடங்கள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    லாஸ் ஏஞ்செல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டு விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு 300,000 பவுண்ட் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார்.

    இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தற்போது உறுதி செய்துள்ளது.

    இதற்கிடையில் தனது முடிவு குறித்து பேசியுள்ள ஜேசன் ராய், நான் எப்போதும் இங்கிலாந்து அணியை விட்டு விலக மாட்டேன். நாட்டுக்காக விளையாடுவது என்றும் தனக்கு பெருமையான காரியம் என்றும் தெரிவித்துள்ளது.

    ஜேசன் ராய் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 5980 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

    • இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
    • ஏப்ரல் 5-ம் தேதியன்று பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் கொல்கத்தா மோதுகிறது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 கோப்பைகளை வென்று 3-வது வெற்றிகரமான அணியாக திகழும் கொல்கத்தா 2014-க்குப்பின் 3-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் காயத்தால் வெளியேறியதால் நிதிஷ் ராணா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    அவரது தலைமையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்றது. ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெறும் பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரரை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுவரை 64 போட்டிகளில் 1522 ரன்களை 137.62 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

    மேலும் ஐபிஎல் தொடரில் 2017, 2018 ஆகிய சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடியிருந்த அவர் கடைசியாக 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். 

    • இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார்.
    • இளம் வீரர் பில் சால்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலகக்கோப்பை ஆகும்.

    அணியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இளம் வீரர் பில் சால்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. டி-20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்துள்ள அணி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 டி-20 போட்டிகளில் ஆடும் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் டி-20 உலகக்கோப்பைக்கான அணி விவரம்:-

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து டி-20 அணி விவரம்:-

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், பென் டக்கெட், லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வுட், மார்க் வுட்.

    • ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பிலிப் சால்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.
    • மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக 2வது ஒருநாள் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

    ஆம்ஸ்டெல்வீன்:

    இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், பிலிப் சால்ட் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேசன் ராய் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பிலிப் சால்ட் 77 ரன்னில் வெளியேறினார். டேவிட் மலான், மொயீன் அலி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இங்கிலாந்து 36.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மலான் 36 ரன்னும், மொயீன் அலி 42 ரன்னும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

    ×