search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shreyas Iyer"

    • இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை.
    • ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கான் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இருப்பினும் இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக கடைசியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் இடம் பிடித்திருந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் இந்த தொடரில் சம்பந்தமின்றி நீக்கப்பட்டுள்ளார்கள். 

    இதில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதாக சொல்லிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர்கள் மீது நன்னடத்தை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

     

    இந்நிலையில் இவர்கள் இருவரும் மீது நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரில் இடைவெளி கேட்ட அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே தற்போது அவர் விளையாடுவதற்கு தயாராக இல்லை.

    இடைவெளி முடிந்ததும் அவர் உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இதன் பின்னணியில் சுமாரான நன்னடத்தை உட்பட எந்த காரணமும் இல்லை.

    இவ்வாறு டிராவிட் கூறினார். 

    • முதல் போட்டியில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் இன்று விளையாடமாட்டார்.
    • ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் 116 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்), ஆவேஷ் கான் (4 விக்கெட்) மிரட்டினார்கள். பேட்டிங்கில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது, 3-வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். டோனி டி ஜோர்ஜி, பெலுக்வாயோ, கேப்டன் மார்க்கிராம் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆடுகளத் தன்மையை சரியாக கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என்பதை கேப்டன் மார்க்கிராம் ஒப்புக் கொண்டார். அவர்கள் அந்த தவறை திருத்திக் கொண்டு வலுவாக திரும்புவார்கள்.

    கடந்த முறை (2022) தென்ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமையில் முழுமையாக (0-3) தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை அதற்கு பரிகாரம் தேடும் வகையில் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் நிதிஷ் ராணா கேப்டனாக செயல்பட்டார்.
    • 2024-ம் ஆண்டு கேகேஆர் அணியின் துணை கேப்டனாக ராணா நியமனம்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனை கேகேஆர் அறிவித்துள்ளது.

    அதன்படி கேகேஆர் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக 2023-ம் ஆண்டு ஐயர் விளையாடவில்லை. அதனால் அந்த சீசன் முழுவதும் கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார்.

    காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காத ஐயர், 2023-ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையில் களமிறங்கினார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 2023 உலகக் கோப்பையிலும் அவர் இடம் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் மூன்று போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த 3 போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 2 ஆட்டத்திலும் விளையாடுகிறார். துணை கேப்டனாக பணியாற்றும் அவரது வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.

    இவ்வாறு பிஷ்னோய் கூறியுள்ளார்.

    23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    • ஷ்ரேயாஸ் அய்யர் 530 ரன்கள் அடித்துள்ளார்.
    • அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ரோகித் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    முக்கியமான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 4-வது இடத்தில் களம் இறங்கி இரண்டு சதங்களுடன் அபாரமாக விளையாடினீர்கள். 530 ரன்கள் குவித்துள்ளீர்கள். ரோகித் சர்மா 31 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், நீங்கள் 24 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என "Iyer" ஹேஷ்டேக் டிரெண்டாக்கி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    • அரையிறுதியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
    • இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்றும் வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன. நாளைமறுதினம் (19-ந்தேதி) குஜராத் மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணியில் 4-வது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி லீக் ஆட்டத்தில் சதம், அரையிறுதியில் சதம் என அசத்தியுள்ளார்.

    இறுதிப் போட்டி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நண்பர்களுடன் சென்று நேரில் பார்த்து ரசித்தேன். அப்போது என் நண்பர்களிடம் நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறினேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறேன். இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பெருமை'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    • நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா.
    • பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள்.

    மும்பை:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அசத்தினாலும் ரபாடா, ஜான்சன் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை சமாளிக்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஆட்டத்தின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில் பின்வருமாறு;-

    ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றன என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்.

    ஆனால் அதில் நான் 2, 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள்தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்

    என்று கூறியுள்ளார்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்கா உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்கப்படுகிறது.
    • முதல் விருதை விராட் கோலி பெற்றார்.

    மும்பை:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி புதிய பாணியை கடைபிடித்து வருகிறது. அது ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டர் விருது வழங்குவதாகும். முதல் விருதை விராட் கோலி பெற்றார். அதனை தொடர்ந்து ஷர்துல் தாகூர், கேஎல் ராகுல், ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐய்யர் என பலரும் பெற்றனர்.

    ஒவ்வொரு முறையும் வித்தியசமான முறையில் விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்த பீல்டிங் பயிற்சியாளர் இந்த முறையும் வித்தியாசமான முறையில் விருது வழங்கியுள்ளார்.

    இந்த முறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறந்த பீல்டர் விருதை அறிவித்தார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த ஆட்டத்தை தொடருங்கள் என பாராட்டிய அவர், இறுதியில் சிறந்த பீல்டர் விருது இந்த முறை ஷ்ரேயாஸ் ஐய்யர் வழங்கப்படுகிறது என கூறினார்.

    இதனை கேட்ட ஷ்ரேயாஸ் துள்ளி குதித்து மகிழ்ச்சியை கொண்டாடினார். 2-வது முறையாக அவர் இந்த விருதை தட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
    • சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.

    சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • ராகுல் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை.
    • இதேபோல ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு உடனடியாக திரும்ப இயலாது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். ஐ.பி.எல். போட்டியின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ராகுல் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை.

    கே.எல்.ராகுல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். அவரது உடல் தகுதியை அங்குள்ள குழு பரிசோதித்து வருகிறது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவருக்கும் இன்னும் அதிகமான நேரம் தேவைப்படுகிறது.

    இதேபோல ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு உடனடியாக திரும்ப இயலாது. முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அவர் ஆபரேசன் செய்து கொண்டார். அவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உள்ளார். இரு வரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவ குழு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது முக்கியமானது. இதனால் இருவரையும் அவசரமாக விளையாட வைக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி ஆகஸ்ட் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது.

    • ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
    • அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

    இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 4-ம் வரிசையில் இறங்குவதற்கு பரிசோதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர்.

    ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடித்த அவருக்கு காயமடைவதுதான் பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4-ம் வரிசைக்கான முதன்மை வீரர். மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.

    இந்நிலையில், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே காயம் காரணமாக அவர் விளையாட வரவில்லை. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆகையால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 3 போட்டியிலும் டக் அவுட்டானார்.முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார்.

    இந்த நிலையில் தான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

    எனினும், வரும் அகடோபர் மாதம் தொடங்க இருக்கும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார். இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவது கடினம் தான். இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பும்ரா மற்றும் முதுகு காயத்தால் அவதிப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் தற்போதைய நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு நியூசிலாந்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பும்ராவுக்கு தற்போது வலி எதுவுமில்லை. டாக்டரின் ஆலோசனைபடி ஆபரேஷன் முடிந்த 6 வாரத்துக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு பழைய உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சி திட்டத்தை பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 'முதுகுவலி பிரச்சினையில் சிக்கி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் நடக்க இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×